முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன அதிபர் வருகை: மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வ அறிவிப்பு

புதன்கிழமை, 9 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகை குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங், நாளை 11-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு வரும் 13-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மோடி - சீன அதிபர் வருகையையொட்டி இறுதிக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பாதுகாப்புக்கு 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மாமல்லபுரத்திற்குள் 4 சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11, 12-ம் தேதிகளில் இந்தியா வருவதை வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11, 12-ம் தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ளார். பல்வேறு துறைகளில் இருதரப்பு விவகாரங்கள், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி, சீன அதிபர் ஆகியோர் விவாதிக்கவுள்ளனர் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து