முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : பிரதமர் மோடி, சீன அதிபர் சந்திப்பு நடைபெறுவதையொட்டி மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் இன்று 11-ம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். இந்நிலையில் சீன அதிபரின் வருகையொட்டி இன்று மற்றும் நாளை சென்னையில் முக்கிய சாலைகளில் காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் அமைந்துள்ள ஜி.எஸ்.டி. சாலை மற்றும் மகாபலிபுரம் ஒ.எம்.ஆர்.சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி கல்லூரி பேருந்துகள் செல்வதில் குழப்பம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாமல்லபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து