முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ராகுல் வரும் 13-ம் தேதி பிரச்சாரம்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை, : மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து  ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் அக்டோபர் 21-ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

தற்போது ஆளும் பா.ஜ.க மற்றும் சிவசேனா கூட்டணி அமைத்து இந்த தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. 

மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 125 தொகுதிகளில் காங்கிரசும், 125 தொகுதிகளில் தேசியவாத காங்கிரசும் போட்டியிடுகின்றன. எஞ்சிய தொகுதிகளில் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 13 மற்றும் 15-ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும், 13-ம் தேதி மும்பையில் பேரணி ஒன்றையும் ராகுல் காந்தி நடத்த உள்ளார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து