முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் ரயில் நிலையத்தில் விருதுநகர் எம்.பி.,மாணிக்கம்தாகூர் ஆய்வு:

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விருதுநகர் எம்.பி.,மாணிக்கம்தாகூர் நேரில் ஆய்வு செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மதுரைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் நகரங்களில் மிகவும் முக்கியமான நகராமாக திருமங்கலம்; திகழ்கிறது.இருப்பினும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதுமில்லாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.குறிப்பாக சாலை வசதி,மின்விளக்கு வசதி,விரிவுபடுத்தப்பட்ட பிளாட்பார மேற்கூரை,பொது சுகாதாரம்,கழிப்பறை,மின்விசிறி வசதி என்று அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அல்லாடி வருகிறது.தினம்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து சென்றிடும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் நேற்று காலை விருதுநகர் எம்.பி.,மாணிக்கம்தாகூர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.முதலில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் ஆய்வு நடத்தி முடித்த விருதுநகர் எம்.பி.,மாணிக்கம்தாகூர், செங்கோட்டை பாசஞ்சர் ரயிலில் ஏறி திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் ரயில் நிலைய சுகாதாரம்,கழிப்பறைவசதி,குடிநீர் வசதி,புதிய கட்டிடங்களின் கட்டுமான பணிகள்,நடை மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை எம்.பி.,மாணிக்கம்தாகூர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது ரயில் நிலையத்தின் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் குப்பைகூளமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து,தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஜொலிக்க வேண்டிய ரயில் நிலையம் குப்பை மேடாக கிடப்பது வேதனையளிப்பதாக உடன் வந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார்.மேலும் திருமங்கலம் ரயில் நிலையத்தில் குருவாயூர்,இன்டர்சிட்டி,அந்தியோதயா மற்றும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று சென்றிட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என பொதுமக்களும் ரயில் பயணிகளும் எம்.பி.,மாணிக்கம்தாகூரிடம் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து மத்திய ரயில்வே அமைச்சரிடம் பேசி கூடுதலாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருமங்கலத்தில் நின்று சென்றிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயராம்,கட்சி நிர்வாகிகள் அம்மாபட்டி பாண்டியன்,முருகேசன், தாமோதரன், பிருதிவிராஜ்,கூட்டணி கட்சியினர் அக்பர்அலி,சுப்புக்காளை,சந்தானம்,திருப்பதி மற்றும் ரயில் நிலைய அதிகாரிகள்,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து