முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முக்கிய குற்றவாளி முருகன் பெங்களூரு கோர்ட்டில் சரண்

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி முருகன், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2-ம் தேதியன்று திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக் கடையின் சுவற்றை துளையிட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. அப்போது, திருவாரூர் அருகே நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற சுரேஷ், மணிகண்டனை காவல்துறையினர் துரத்தி சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் சுரேஷ் தப்பிய நிலையில், மணிகண்டன் காவல்துறையிடம் சிக்கினார். மேலும், கொள்ளைச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளிகளான திருவாரூர் முருகன் மற்றும் சுரேஷ் உள்ளிட்டோரை திருச்சி மாநகர போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், தகவலறிந்த சுரேஷ் தனது மனைவியுடன் தலைமறைவானார்.

இதே போல், முருகனும் அவரது மனைவி மஞ்சுளா மற்றும் குழந்தைகளுடன் தலைமறைவானார். தப்பியோடிய சுரேஷ், பெங்களூருவில் இருப்பதாக தகவல் வரவே, அங்கும் போலீசார் சென்றனர். சுரேஷின் தாய் கனகவல்லி மற்றும் தந்தை குணசேகரன், முருகனின் அண்ணன் மகன் முரளி உள்ளிட்ட குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், கொள்ளையடித்த 16 கிலோ தங்கத்தை உருக்கி விற்க உதவிய, முருகனுக்கு மிக நெருக்கமான, நாகப்பட்டினம் காளிதாஸ் உள்ளிட்ட நான்கு பொற்கொல்லர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நெருக்கடிகளுக்குப் பணிந்து நேற்று முன்தினம் காலை சுரேஷ் திருவண்ணாமலையை அடுத்த செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளி முருகன், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகன் பெங்களூரு 11-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து