எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் : கொல்லைப்புற வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் எண்ணம் ஒரு போதும் ஈடேறாது என்றும், வரும் 2021-ம் ஆண்டிலும் அ.தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும் என்றும் விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று பிரச்சாரத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
உற்சாக வரவேற்பு
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் வருகிற 21-ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் 2 தொகுதிகளிலும் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது சூறாவளி பிரச்சாரத்தை துவக்கினார். முதலில் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள முண்டியம்பாக்கத்தில் அவர் பிரச்சாரம் செய்தார். முன்னதாக அவருக்கு தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். திறந்த வேனில் நின்றபடி அவர் பிரச்சாரம் செய்தார். அவரது அருகில் அமைச்சர் சி.வி. சண்முகம், அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன் ஆகியோர் இருந்தனர். இந்த பிரச்சாரத்தின் போது முதல்வர் பேசியதாவது,
திமிராக பேசுகிறார்
1989-ம் ஆண்டில் தனது தந்தையின் செல்வாக்கில் எம்.எல்.ஏ. ஆனவர்தான் மு.க. ஸ்டாலின். ஆனால் ஒரு சாதாரண தொண்டன் எம்.எல்.ஏ.ஆவது என்பது மிக கடினம். எங்களை பற்றி மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். அவ்வாறு விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி உள்ளது. நாங்கள் தந்தையின் நிழலில் பதவிக்கு வரவில்லை. உழைப்பால் வந்தவர்கள். உழைப்பே இல்லாத ஒருவர் மிகவும் திமிராக பேசுகிறார். உண்மைக்கு புறம்பான செய்திகளை பேசி வருகிறார். இந்த ஆட்சி 10 நாளில் போய் விடும் என்றார். ஆனால் 2 ஆண்டுகளாக மிக சிறப்பாக இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. கொல்லைப்புற வழியாக உங்களால் பதவிக்கு வரவே முடியாது. எங்களுக்கு வெறும் 5 எம்.எல்.ஏ.க்கள் தான் அதிகம் இருப்பதாக சொல்கிறார். 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நான் முதலமைச்சராகி இருக்கிறேன்.
நன்மை எதுவும் இல்லை
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் இந்த இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. ஒரு தொண்டனை கூட அசைத்து பார்க்க முடியாது. எனவே திமிர் பேச்சை ஸ்டாலின் விட வேண்டும். இல்லாவிட்டால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பிற்காலத்தில் கிடைக்காது. தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது. எதுவும் இல்லை.
வழிகாட்டியாக தமிழகம்
இந்தியாவிலேயே தமிழகம் கல்வியில் முதலிடம் வகிக்கிறது. 48 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கியிருக்கிறோம். இது சாதனை இல்லையா? கல்வியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கல்வியை மையமாக வைத்துதான் பொருளாதாரம் உயரும். அதற்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். நான் ஒரு விவசாயி. இந்த பகுதி ஒரு விவசாய பகுதி. விவசாயிகளுக்கு பல நன்மைகளை செய்திருக்கிறோம். நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம். குடிமராமத்து திட்டம் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாறப்பட்டு வருகின்றன. முதலில் இதற்காக ரூ. 100 கோடி ஒதுக்கினோம். பிறகு 2019-ல் 500 கோடியில் 1829 ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இத்திட்டத்திற்கு மேலும் நிதி ஒதுக்கப்படும். இந்தியாவுக்கு வழிகாட்டியாக தமிழகம் திகழ்கிறது.
கோதாவரி - காவிரி இணைப்பு
விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நீரை கொடுக்கும் திட்டம்தான் நீர் மேலாண்மை திட்டம். விவசாயத்தில் அதிக ஆர்வம் கொண்டவன் நான். அதனால்தான் பொறியாளர்களை நியமித்து தமிழகம் முழுவதும் அவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது. கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கிய அரசு அம்மாவின் அரசு. பயிர் காப்பீட்டு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம். விவசாயிகள் பயிரிடும் காய், பழங்களுக்கு நியாய விலை கிடைக்க உணவு பூங்கா அமைக்கவிருக்கிறோம். ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு. அம்மா இருந்த போது வழங்கப்பட்ட அரை பவுன் பிறகு ஒரு பவுனாக உயர்த்தப்பட்டது. நிதியுதவியும் அதிகரிக்கப்பட்டது. இப்படி பல சாதனைகள் செய்திருக்கிறோம்.
பொய்யான வாக்குறுதிகள்
ஆனால் தி.மு.க.வினர் நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார்கள். முழு பூசணி காயை சோற்றில் மறைத்து ஓட்டு வாங்கியவர்கள் இவர்கள். விவசாயிகளுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் என்றும் வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவோம் என்று கூறி ஓட்டு வாங்கியவர்கள். தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசும் போது, அ.தி.மு.க.வில் ஊழல் என்று கூறியுள்ளார். ஆனால் நான் சொல்கிறேன். ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். அப்போது தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீதெல்லாம் வழக்கு போடப்பட்டது. இவர்கள் எப்படி சம்பாதித்தார்கள். பிறக்கும் போதே டாடா, பிர்லாவாக பிறந்தார்களா. எல்லாமே மக்கள் பணம்தானே. ஊழலில் திளைத்த கட்சி தி.மு.க. தி.மு.க. பிரமுகர்கள் பலரும் கல்லூரி கட்டியிருக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 2012-லும் அ.தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். எனவே பொய் பேசும் இவர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவர் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது பொதுமக்கள் திரண்டு வந்து அவரது பேச்சை ஆர்வமாக கேட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
வல்லவன் வகுத்ததடா விமர்சனம்
22 Apr 2024நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனா கை விட்டுருவான்” என்ற வாக்கியத்தை வைத்துக்கொண்டு இயக்குநர் விநாயக்