முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றார் சீன அதிபர்

சனிக்கிழமை, 12 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முறைசாரா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து சீன அதிபர் ஜி ஜின் பிங் தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் மதியம் சென்னை வந்தார். பின்னர் பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தை அவர் சுற்றி பார்த்தார். மேலும் இருவரும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தனர். பின்னர் இரவு விருந்து முடிந்ததும், சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று தங்கினார். பிரதமர் மோடி, காரில் கோவளம் புறப்பட்டு சென்று அங்குள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு சென்று தங்கினார்.

இதனையடுத்து நேற்று காலை மோடி தங்கியிருந்த தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு கார் மூலம் சீன அதிபர் சென்றார். அங்கு சென்ற ஜி ஜின் பிங்கை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். பின்னர் ஓட்டலில் கண்ணாடி அறையில் தனியாக ஆலோசனை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் மத்தியிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிந்த பின் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி வாயில்வரை வந்து வழியனுப்பி வைத்தார். பி்ன்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் வந்த அவர் சென்னை விமான நிலையத்தில் இருந்து சீன அதிபர் ஜி ஜின் பிங் தனி விமானம் மூலம் நேபாளம் புறப்பட்டு சென்றார். முன்னதாக விமான நிலையம் வந்தடைந்த சீன அதிபர் ஜிஜின்பிங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து