முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங்கில் மீண்டும் பேரணி

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      உலகம்
Image Unavailable

ஹாங்காங் : ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக சீனாவுக்கு எதிராக பொது மக்கள் மீண்டும் போராட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்டனர்.

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் கடந்த 4 மாதங்களாக சீனாவுக்கு எதிராக போராட்டம் மற்றும் பேரணிகள் நடந்து வருகின்றன. கடந்த 6-ம் தேதிக்கு பிறகு போராட்டங்கள் எதுவும் நடக்காத நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பேரணி நடந்தது. கவ்லூன் நகரில் நடந்த பேரணியில் 2 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்கள் மழையையும் பொருட்படுத்தாமல், கோ‌‌ஷங்களை எழுப்பியபடி சென்றனர். கவ்லூன் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் சிலர் மதுபாட்டில்களை வீசிச் சென்றனர். அதில் யாரும் காயமடையவில்லை. பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுபோல், ஹாங்காங் போலீஸ் தலைமையகம் முன்பு ஓய்வூதியர்கள் 200 பேர் அமைதியாக போராட்டம் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து