முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்கு வங்கி அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியம் - தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 13 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

மும்பை : வாக்கு வங்கி அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்து வருகிறார். புல்தானாவில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-

காஷ்மீர் பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியின் இங்கிலாந்து பிரிவு அந்நாட்டு தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பினுடன் விவாதிக்கிறது. இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகளின் மூன்றாவது நபரின் தலையீடு கூடாது என்ற நாட்டின் நிலைப்பாட்டுக்கு எதிரானது. எனவே ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இது பற்றி ராகுல்காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

பா.ஜ.க. கூட்டணி 2-வது முறையாக வெற்றி பெற்றதும், காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதுதான் மோடியின் முதல் முடிவாக இருந்தது. எந்தவொரு பிரதமரும் இந்த பிரச்சினையை தொட துணியவில்லை. ஆனால் மோடி அதை செய்தார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கினால் பள்ளத்தாக்கில் ரத்த ஆறு ஓடும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறினார். நாடாளுமன்றத்தில் இந்த முடிவுக்கு எதிராக வாக்களித்தார். ஆனால் ஒரு துளி ரத்தம் கூட சிந்தவில்லை.

மராட்டிய அரசியலுடன் 370-வது பிரிவுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என எதிர்க்கட்சிகள் கேட்கின்றன. காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என ஒட்டுமொத்த நாடும் விரும்பியது. மோடி அந்த விருப்பதை நிறைவேற்றினார். மராட்டியத்துக்கு காஷ்மீருடன் தொடர்பு இல்லையா? புல்தானாவை சேர்ந்த வீரர்கள் காஷ்மீரின் பாதுகாப்பிற்காக தங்களது உயிரை தியாகம் செய்தனர். வாக்கு வங்கி அரசியலை விட நாட்டின் பாதுகாப்பு முக்கியமானது. தேசிய பிரச்சினைகள் முக்கியம் என்பதை எதிர்க்கட்சிகள் உணரவில்லை. அந்த கட்சிகள் தங்களது குடும்ப நலனுக்காக பாடுபடுகின்றன. ஆனால் பா.ஜ.க.வும், சிவசேனாவும் நாட்டின் நலனை மட்டுமே அக்கறையாக கொண்டு உள்ளன. முன்பு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவை தாக்கிய போது எந்த எதிர்வினையும் இல்லை. அப்போதைய பிரதமர் (மன்மோகன் சிங்) அமைதியாக இருந்தார். ஆனால் 2014-ல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த அணுகுமுறை மாறியது. உரி மற்றும் புல்வாமா தாக்குதல் நடந்த போது துல்லிய தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல்கள் மூலம் மோடி பதிலடி கொடுத்தார்.

2024-ம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள். 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் நாங்கள் அனைவரும் ஒன்று என்பதை காட்டுவதற்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. மராட்டியத்தின் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருப்பார். 4-ல் 3 பங்கு இடங்களில் பா.ஜ.க. கூட்டணியை வாக்காளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து