எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் இடைதேர்தல் வருவதற்கு காங்கிரஸ் கட்சியின் சுயநலமே காரணம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இடைதேர்தல் ஏன்?
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு அதன் பிறகு இடைதேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த தொகுதியில் வருகிற 21-ம் தேதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், அ.தி.மு.க. பிரமுகர்கள் வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்து வந்தார்கள். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
முதல்வர் பிரச்சாரம்
நேற்று அவர் நாங்குநேரி தொகுதிக்கு வந்தார். அப்போது அவரை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பிறகு ரெட்டியார்பட்டி பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்துக்கு மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
நாங்குநேரி தொகுதியில் இடைதேர்தல் வரக்காரணமே காங்கிரஸ் கட்சியின் சுயநலம்தான். இது ஒரு திணிக்கப்பட்ட தேர்தல். நமது வேட்பாளர் நாராயணன் இந்த பகுதியை சேர்ந்தவர். அவர் மக்களின் குறைகளை கேட்பார். ஏற்கனவே இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார் பெரிய பதவி கிடைத்ததும் ஓடிப் போய் விட்டார். அவர் இந்த தொகுதி மக்களை மறந்து விட்டார். இப்போது இங்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும் இப்படித்தான். இங்கு அலைகடலென திரண்டிருக்கிறீர்கள். ஏதோ வெற்றி விழா நடப்பது போல் கூடியிருக்கிறீர்கள். நீங்கள் யாரை தேர்ந்தெடுத்தால் நல்லது என்று முடிவு செய்து விட்டு வாக்களிக்க வேண்டும். ரெட்டியார்பட்டி நாராயணன் இங்கே பிறந்து வளர்ந்தவர். அவரை நீங்கள் எளிதில் அணுகலாம். அவர் உங்களுக்கு நன்மை செய்யக் கூடியவர். ஆகவே உங்களுக்கு தேவை நன்மை செய்யும் வேட்பாளரா? அல்லது வெளியூரில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளரா? காங்கிரஸ் வேட்பாளர் ஒரு கோடீஸ்வரர். அவரை நீங்கள் சுலபமாக அணுக முடியாது. எனவே நீங்கள் எளிதில் அணுக கூடிய அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாய்ப்பு தாருங்கள்.
ஸ்டாலின் மீது தாக்கு
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு இடைதேர்தல் வரும் போதுதான் திண்ணை பற்றி ஞாபகமே வரும். இடைதேர்தல் நடக்கும் போது திண்ணையில் வந்து உட்கார்ந்து பிரச்சாரம் செய்வார். பெட்ஷீட் போட்டு உட்கார்ந்து மக்களை ஏமாற்றுவார். உங்களுக்கு என்ன பிரச்சினை என்றெல்லாம் கேட்டு மனு வாங்குவார். இவர் மனு வாங்கி என்ன செய்யப் போகிறார். அந்த மனுவை யாரிடம் தருவார். அந்த மனுக்கள் எல்லாம் குப்பை தொட்டிக்குத்தான் போகும். ஆளும் கட்சி பிரதிநிதியிடம் மனுக்கள் கொடுத்தால் அந்த பிரச்சினை தீரும். சின்ன பிரச்சினை என்றால் அவரிடம் கொடுக்கலாம். பெரிய பிரச்சினை என்றால் அமைச்சர்கள், முதல்வரிடம் கொடுக்கலாம். ஸ்டாலின் மனு வாங்கி என்ன செய்ய முடியும். பாராளுமன்ற தேர்தலின் போது ஏராளமான பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி விட்டார். கல்விக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி என்றெல்லாம் சொன்னார். விவசாயிகளுக்கு ரூ. 6 ஆயிரம் தருவதாக சொன்னார்கள். வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் தருவதாகவும் இவர்கள் சொன்னார்கள். இப்படி பொய்யெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றினார்கள். ஆனால் வேலூர் தொகுதியில் தேர்தல் நடந்த போது மக்கள் உண்மையை புரிந்து கொண்டு விட்டார்கள். இனி மக்களை ஏமாற்ற முடியாது. எனவே உங்களுக்கு நன்மை செய்யக் கூடிய அ.தி.மு.க வேட்பாளருக்கு வாக்களித்து அமோக வெற்றி தேடி தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பிறகு நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் எடப்பாடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.
இன்றும் பிரச்சாரம்
நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்ப்பட்டி நாராயணனை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சூறாவளி பிரசாரம் செய்தார். அதன் தொடர்ச்சியாக இன்று பிற்பகல் 3 மணிக்கு களக்காடு ஒன்றியத்தில் உள்ள ஏர்வாடி பேரூராட்சியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அதையடுத்து திருக்குறுங்குடி பேரூராட்சி, மாவடி, களக்காடு பேரூராட்சி, சிங்கிகுளம் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதன் பின்னர் வரும் 18-ம் தேதி மாலை 3 மணிக்கு பாளையங்கோட்டை ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதைத் தொடர்ந்து முன்னீர்பாளையம், கிருஷ்ணாபுரம், கே.டி.சி.நகர், சீவலப்புரி ஆகிய இடங்களில் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டியில்...
இதற்கிடையே விக்கிரவாண்டியில் வரும் 16-ம் தேதி காணை மற்றும் கோலியனூர் ஆகிய ஒன்றியத்தில் உள்ள 6 இடங்களிலும் 17-ம் தேதி கோலியனூர் ஒன்றியத்தில் உள்ள விராட்டிக்குப்பம், விக்கிரவாண்டி மற்றும் காணை ஒன்றியங்களில் உள்ள தும்பூர், முட்டத்தூர், பனைமலை அன்னியூர் மற்றும் கடையம் ஆகிய இடங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.