முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்தது: 12 பேர் பலி

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தர பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகினர்.

உத்தர பிரதேச மாநிலம் முகமதாபாத் அருகே உள்ள வாலித்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை சமையல் செய்து கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதனால் 2 மாடி கொண்ட அந்த வீட்டின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்தது. வீட்டில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக தேவையான நிவாரண உதவி மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து