முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சி.பி.சி.ஐ.டி. அறிக்கை தாக்கல்

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

தேனி : நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக மருத்துவ கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கையை தேனி நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்த வழக்கில் 4 மாணவர்கள், ஒரு மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர் 5 பேர் உட்பட இதுவரை 10 கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் முந்தைய விசாரணையின் போது நீதிபதி பன்னீர்செல்வம், நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக கல்லூரிகளில் சான்றிதழ்களை சரிபார்க்கும் குழுவிடம் இதுகுறித்து விசாரணை நடத்தினீர்களா என சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் இவ்வழக்கு பதிவு செய்த நாளில் இருந்து, வழக்கு தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றிய ஜெனரல் டைரி எனப்படும் பொது குறிப்பேட்டையும் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில், சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி 14-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கு தொடர்பான விவரங்களை சி.பி.சி.ஐ.டி. காவல் ஆய்வாளர் சித்ரா தேவி தேனி நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வத்திடம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக தருமபுரி மருத்துவக்கல்லூரி, பாலாஜி மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. சவீதா மருத்துவ கல்லூரி மாணவி பிரியங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது, மருத்துவ கல்லூரி சான்றிதழ் சரிபார்ப்பு குழுவை ஏன் விசாரிக்கவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதி, அவர்களிடம் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சத்திய சாய் மருத்துவமனை கல்லூரி உள்ளிட்ட 3 கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து இந்த குழுக்களிடம் எழுத்துபூர்வமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து