முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அப்துல்கலாமின் 88 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி: கலாம் சமாதியில் அவரது குடும்பத்தினர்,மாணவர்கள் மலர் தூவி மரியாதை

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,-    இந்திய குடியரசு முன்னாள் தலைவர்  ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 88 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ராமேசுவரம் பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் சமாதியில்  அப்துல்கலாம் குடும்பத்தினர்,மாணவர்கள்,சமுக ஆர்வாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி நேற்று கொண்டாடினார்கள்.
  இந்திய குடியரசு முன்னாள் தலைவரும்,பாரத ரத்னா டாக்டா் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 88 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி ராமேசுவரம் அருகே அமைந்துள்ள அப்துல்கலாம் தேசிய நினைவகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்துல்கலாம் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்,ராமேசுவரம் ஜமாத் நிர்வாகிகள் தேசிய நினைவகத்திற்கு நேற்று காலை 9 மணியளவில்  வருகை தந்தனர்.பின்னர் அங்கு  ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் அப்துல்கலாம் சமாதி முன்பு குடும்பத்தினர் அமர்ந்து தூ ஆ ஓதினார்கள்.பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள். பின்னர் கலாம் சமாதிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.நிகழ்ச்சியில் தொடர்ந்து பள்ளி மாணவர்களும்,பொதுமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.இந்நிகழ்ச்சியில் தொடர்ந்து அப்துல்கலாம் சமாதிக்கு அப்துலகலாம் அண்ணன் ்கள் டாக்டர் நசிமாபேகம்,உறவினர் நிஜாம்முதீன், மற்றும் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ரோட்டரி சங்க  நிர்வாகிகள் பொறியாளர் முருகன், நாகராஜ் மற்றும் திரைப்பட நடிகர் தாமு,சென்னை பகுதியை சேர்ந்த மருத்துவர் ராகவன்,ஜமாத்  நிர்வாகிகள்,பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து