முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது - நாங்குநேரியில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2019      தமிழகம்
Image Unavailable

நாங்குநேரி : அ.தி.மு.க. ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது என்று துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பேசினார்.

தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெற உள்ளது.  இதற்கான தேர்தல் பிரசார பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அக்கட்சி சார்பில், நாங்குநேரி தொகுதியில் ரெட்டியார்பட்டி நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்செல்வனும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டு உள்ளனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. வருகிற 19-ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது. இதனால், தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று மறுகால்குறிச்சியில் பிரசாரம் மேற்கொண்டார்.  அப்போது அவர் பேசும் போது, ஏதாவது பொய் சொல்லி அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்கலாம் என நினைக்கிறார்கள். ஆட்சியை யாராலும் கவிழ்க்க முடியாது.  யாருடைய ஆட்சியில் மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன என்று வாக்காளர்களாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும் என்று பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து