முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: மேலிட பார்வையாளர் பாலசுப்பிரமணியன் பங்கேற்பு:

ஞாயிற்றுக்கிழமை, 20 அக்டோபர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் நகரில் நடைபெற்ற மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர் கே.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் மற்றும் இயக்கத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.
மதுரை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலம் நகர் தெற்குத்தெரு காந்திசிலை பின்புறமுள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.உள்ளிhட்சி தேர்தல் மற்றும் கட்சியின் வளர்ச்சி தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மதுரை தெற்கு மாவட்ட த.மா.கா தலைவர் பி.காந்தி தலைமை வகித்தார்.மாவட்ட இளைஞரணி தலைவர்கே.நாகமலைச்சாமி முன்னிலை வகித்தார்.மாநில விவசாய அணித் தலைவர் எம்.ஜெகதீசன் வரவேற்று பேசினார்.ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் கே.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதனை தொடர்ந்து தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக அமைத்திட வேண்டும்,நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் த.மா.கா-வுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கிட வேண்டும்,முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை குறித்து சீமான் தெரிவித்த கருத்துகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் அவரை உடனடியாக கைது செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீதர்,வட்டார தலைவர்கள் மாணிக்கம்,தவமணி,கருப்பையா கட்சி நிர்வாகிகள் கொடிகாத்தகுமரன்,ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவில் திருமங்கலம் நகர் த.மா.கா தலைவர் எம்.துரைப்பாண்டி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து