முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயதான தந்தையை கவனித்திடாமல் கைவிட்ட மகளின் தான செட்டில்மென்ட் பத்திரம் ரத்து: திருமங்கலம் ஆர்.டி.ஓ முருகேசன் அதிரடி நடவடிக்கை!!

புதன்கிழமை, 23 அக்டோபர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- வயதான தந்தையிடமிருந்து சொத்துக்களை தானமாக பெற்றுக் கொண்டு அவரை கவனிக்காமல் இருந்த மகளின் தான செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்து  திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
பெற்றோர்களிடம் இருந்த சொத்துக்களை பறித்துக் கொண்டு அவர்களை கவனித்திடாமல் கைவிடும் மகன்கள் மற்றும் மகள்கள் தொடர்பான புகார்கள் தற்போது அதிகளவில் வருகின்றன.இது போன்ற புகார்களுக்கு ஆளாவோர் மீது தமிழ்நாடு மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர் பராமரிப்பு நல்வாழ்வு சட்டம் 2007 பிரிவு 23ன் படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருமங்கலம் அருகேயுள்ள மாவிலிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வைரன்(81).இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவருக்கு சிவனம்மாள் என்ற மனைவியும் மூன்று மகன்களும் ஒரு மகளும் இருந்தனர்.இந்நிலையில் மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இறந்துவிட்ட நிலையில் கடந்த 2002 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் தனது மகள் தமிழ்மணி(61) என்பவருக்கு தனது சொத்துக்களை வைரன் தானமாக கொடுத்துள்ளார்.நெல்லை மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற தமிழ்மணி தனது தந்தையை முறையாக கவனிக்காமல் விட்டதால் இருவருக்கு மிடையே முன்பகை ஏற்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு தனது தந்தை வைரன் இருந்த வீட்டை தமிழ்மணி புல்டோசர் வைத்து இடித்து தரை மட்டமாக்கியுள்ளார்.
இதனால் நிர்கதியாய் தவித்த வைரன் இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்திடுமாறு கோரிக்கை விடுத்து திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசனிடம் புகார்மனு கொடுத்துள்ளார்.இதையடுத்து இரு தரப்பினரையும் அழைத்து ஆர்.டி.ஓ முருகேசன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.அப்போது ஒத்துழைப்பு கொடுக்காமல் வாக்குமூலம் கொடுக்க மறுத்த தமிழ்மணிக்கு அவரது தந்தை வைரன் தானமாக எழுதிக் கொடுத்த ரூ.3.80கோடி மதிப்புள்ள சொத்துக்களின் தானசெட்டில்மென்ட் பதிவினை ரத்து செய்து ஆர்.டி.ஓ முருகேசன் உத்தவிட்டார்.மேலும் இது தொடர்பான உத்தரவின் நகலை வைரனுக்கு ஆர்.டி.ஓ முருகேசன் வழங்கினார்.இந்த சம்பவம் திருமங்கலம் நகரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து