எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியானாவில் சுயேட்சைகள் ஆதரவுடன் மனோகர்லால் கட்டார் தலைமையில் பாரதிய ஜனதாவின் புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. 288 இடங்களைக் கொண்ட மகராஷ்டிராவில் பாரதிய ஜனதா-சிவசேனா கூட்டணி 161 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் 90 இடங்களை கொண்ட அரியானாவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்தை பெற முடியாத அளவுக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு பா.ஜனதா கடந்த முறை 47 இடங்களில் வெற்றி பெற்று இருந்த நிலையில் தற்போது 40 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது.
ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில் அந்த எண்ணிக்கையை பாரதிய ஜனதாவால் இந்த முறை எட்ட இயலவில்லை. தனிப்பெரும் கட்சியாக நீடித்த போதிலும் பாரதிய ஜனதாவால் போதிய இடங்களை பெற இயலாததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை உருவானது. அரியானாவில் கடந்த முறை 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ் இந்த தடவை 31 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதாவுக்கு வலுவான சவாலை கொடுத்துள்ளது. அதுபோல தேவிலாலின் பேரனான துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களை கைப்பற்றி பாரதிய ஜனதாவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்திய தேசிய லோக் தளம் 1, அரியானா லோக் கித் கட்சி 1 மற்றும் 7 சுயேட்சைகள் ஆகிய 9 பேர் வெற்றி பெற்றதால் பாரதிய ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. என்றாலும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை பாரதிய ஜனதா தற்போது தொடங்கி விட்டது.
அரியானாவில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்தும் முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தை அமித்ஷாவிடம் பா.ஜனதா பாராளுமன்ற குழு ஏற்கனவே வழங்கி இருந்தது. இதனால் அரியானா தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த நிலையிலேயே சுயேட்சைகளின் ஆதரவை பெற அமித்ஷா உத்தரவிட்டார். அதோடு அரியானா முதல்-மந்திரி மனோகர்லால் கட்டாரையும் டெல்லிக்கு அழைத்து சில யோசனைகளை தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அரியானாவில் வெற்றி பெற்றுள்ள 7 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் லோக் தளம், அரியானா லோக்கித் கட்சி எம்.எல்.ஏ.க்கள் என 9 எம்.எல்ஏ.க்களின் ஆதரவை திரட்டும் அதிரடி நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா ஈடுபட்டது. பாரதிய ஜனதாவின் 2-ம் கட்ட தலைவர்கள் குழுக்களாக பிரிந்து சுயேட்சை எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தங்கள் பக்கம் இழுத்தனர்.
பா.ஜனதா தலைவர்களின் பேச்சுவார்த்தையால் கட்டார் தலைமையில் ஆட்சி அமைக்க சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் நயன்பால் ரவத், ரஞ்சித்சிங், சோம்வீர் சங்வான், பால்ராஜ் குண்டு ஆகிய 4 பேரும் உடனடியாக சம்மதித்தனர். இவர்கள் 4 பேரும் பாரதிய ஜனதாவில் இருந்தவர்கள். தேர்தலில் போட்டியிட டிக்கெட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால் இந்த 4 பேரையும் தங்கள் பக்கம் வளைப்பதற்கு பா.ஜ.க. தலைவர்களால் மிக எளிதாகி விட்டது. அதுபோல மற்றொரு சுயேட்சை எம்.எல்.ஏ.வான ராகேஷ் தவுதாபாத் என்பவரையும் பா.ஜ.க. தலைவர்கள் தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். இந்த 5 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் உடனடியாக விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதற்கிடையே தேவிலாலின் இளைய மகனும், லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ.வுமான ரஞ்சித்சிங்கிடமும் பா.ஜ.க. தலைவர்கள் ஆதரவு கேட்டனர். அதுபோல அரியானா லோக்கித் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான கோபால் கண்ட் என்பவரிடமும் பா.ஜக. தலைவர்கள் ஆதரவு கேட்டனர். அவர்கள் இருவரும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க சம்மதம் தெரிவித்தனர்.
அவர்களை சிர்சா பாராளுமன்ற எம்.பி. சுனிதா தனி விமானத்தில் நேற்று டெல்லிக்கு அழைத்துச் சென்றார். ரஞ்சித்சிங் காங்கிரஸ் சார்பில் போட்டியிட டிக்கெட் கேட்டார். காங்கிரஸ் கொடுக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் காங்கிரஸ் பக்கம் செல்ல விரும்பாத அவர் உடனடியாக பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதற்கிடையே மேலும் 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்களையும் தங்கள் பக்கம் கொண்டுவர பா.ஜனதா கட்சி தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் 9 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைப்பது உறுதியாகி உள்ளது. .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.