முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளத்தில் சண்முகர் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளம் ஸ்ரீபாலசுப்பிரமணிய திருக்கோவிலில் இன்று காலை முருகப்பெருமானுக்கு அன்னபாவாடை சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து வராகநதிக்கரையில் வேலுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வள்ளி, தெய்வானை, சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. திருக்கல்யாணத்திற்கான தாலி உட்பட மாங்கல்ய பொருட்கள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.  அதனை தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற்று  மஹா தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெண்கள் புது மாங்கல்யம் மாற்றிக் கொண்டனர். இவ்விழாவில் தேனி ஆவின் தலைவர் ஓ.ராஜா, சண்முகசுந்தரம்,  ஆனந்திரவீந்திரநாத்குமார், டாக்டர் முத்துகுகன் ஐஸ்வர்யாமுத்துகுகன் உள்ளிட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் வழக்கறிஞர் அம்பாசங்கர் ஏற்பாட்டில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து