முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா தஞ்சையில் தொடங்கியது

செவ்வாய்க்கிழமை, 5 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

தஞ்சை : தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா நேற்று தொடங்கியது.

தஞ்சை பெரிய கோவில் என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டி எழுப்பினார்.  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் என்ற பெருமையுடன் இன்றும் நிலைத்து நின்று அவரது புகழை எடுத்துரைக்கிறது. தஞ்சை பகுதியை ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034-வது சதய விழா நாளை கோலாகலமுடன் கொண்டாடப்பட இருக்கிறது.  இதனை முன்னிட்டு தஞ்சையில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை அடுத்து, இன்று 6-ம் தேதிக்கு பதிலாக நவம்பர் 23-ம் தேதி மாற்று வேலைநாளாக செயல்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை அறிவித்து உள்ளார். இந்த நிலையில், தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா மங்கள இசையுடன் நேற்று தொடங்கியது. இதனை தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து