Idhayam Matrimony

இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வேன்: நீரவ் மோடி மிரட்டல்

வியாழக்கிழமை, 7 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

லண்டன் : இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என வைர வியாபாரி நிரவ் மோடி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அங்கு எனக்கு நியாயம் கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தலைமறைவாக இருந்த இவர் லண்டலின் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நீரவ் மோடி ஐந்தாவது முறையாக ஜாமீன் கோரி லண்டன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருக்கிறார். 4 முறை இவரின் மனுவை நீதிமன்றம் நீராகரித்து விட்டது. அதனால் தாம் கடுமையான பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி 5-வது முறையாக நிரவ் மோடி தாக்கல் செய்தார்.

ஜாமின் மனுவை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் அதையும் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து ஜாமின் மனு மீதான விசாரணையின் போது சிறையில் தன்னை மோசமாக நடத்துவதாகவும், தாம் மூன்று முறை தாக்கப்பட்டதாகவும் நிரவ் மோடி கூறியிருக்கிறார். மேலும் இந்தியாவிடம் தன்னை ஒப்படைத்தால் தன்னை தானே மாய்த்து கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அவர் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையெல்லாம் கேட்ட நீதிபதி, நிரவ் மோடியை வெளியில் விட்டால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்று கூறி 5-வது முறையாக மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையானது அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து