முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அறக்கட்டளை நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அபராதம்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

அறக்கட்டளை நிதியை தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன் எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் நிதியை டிரம்ப் தனது சொந்த செலவுகளுக்கு பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறக்கட்டளை மூடப்பட்டது. இது தொடர்பாக நடந்து வந்த வழக்கில் டிரம்ப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவரக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிபர் டிரம்ப் தனது அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றம் அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 கோடி ) அபராதம் விதித்துள்ளது.

இத்தகைய அறக்கட்டளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சேலியன் ஸ்கார்புலா தெரிவித்தார். முன்னாள் பாதுகாப்பு படையினருக்காக வசூலிக்கப்பட்ட பணம் டிரம்ப் தேர்தல் செலவுக்கு 2016-ல் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத வேறு எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து