முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.

சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ், தனது வாழ் நாளின் பெரும் பகுதியை பாகிஸ் தானில் உள்ள கர்தார்பூரில் கழித்தார். அவரது நினைவாக அங்கு தர்பார் சாஹிப் குருத்வாரா உள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாரா வையும் பாகிஸ்தானின் கர்தார் பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாராவையும் இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கப் பட்டுள்ளது. குருநானக்கின் பிறந்த நாள் வரும் 12-ம் தேதி கொண் டாடப்படுகிறது. இதையொட்டி, தேரா பாபா நானக் குருத்வாராவில் இன்று நடைபெறும் விழாவில் கர்தார்பூர் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். பாகிஸ்தானின் கர்தார்பூர் குருத் வாராவில் இன்று நடைபெறும் விழாவில் அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் புதிய வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் முதல் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சுமார் 550 பேர் இடம்பெற்றுள்ளனர். கர்தார்பூர் குருத்வாராவில் காணிக்கையாக செலுத்த வெள்ளி கிரீடம், வாள் ஆகியவற்றை மன்மோகன்சிங்கிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வழங்கியுள்ளனர். பாகிஸ்தானில் நடைபெறும் விழாவில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவரும் இம்ரான்கானின் நண்பருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இம்ரான்கான் விழாவில் பங்கேற்க அனுமதி கோரி மத்திய வெளியுறவு அமைச் சகத்துக்கு சித்து 2 முறை கடிதம் அனுப்பினார். இதற்கு அமைச்சகம் பதிலளிக்காத நிலையில் அவர் நேற்று முன்தினம் 3-வது கடிதத்தை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப் பினார். இதை பரிசீலித்த மத்திய அரசு சித்துவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து