முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைகை மற்றும் மருதாநதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

வைகை மற்றும் மருதாநதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வைகை அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப்பகுதி III-க்கு 9.11.2019 முதல் 16.11.2019 வரை உள்ள 7 நாட்களுக்கு 1441 மில்லியன் கன அடியும், வைகை பூர்வீக பாசனப்பகுதி II-க்கு 17.11.2019 முதல் 21.11.2019 வரை 4 நாட்களுக்கு  386 மில்லியன் கன அடியும், 22.11.2019 முதல் 25.11.2019 வரை மூன்று நாட்களுக்கு 48 மி.க.அடியும் பகுதி I-யை சார்ந்த நான்கு கண்மாய்களுக்கு,  விரகனூர் மதகணையில் வழங்கவும் மற்றும் வைகை பூர்வீகபாசனப்பகுதி I-க்கு 26.11.2019 முதல் 2.12.2019 வரை 240 மில்லியன் கனஅடி தண்ணீரை வைகை அணையிலிருந்து திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் நிலங்கள் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மருதாநதி அணையிலிருந்து பாசனத்திற்கு  9.11.2019 முதல் 90 நாட்களுக்கு தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மருதாநதி  அணையிலிருந்து  பாசனம் பெறும் 6583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி   பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து