எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திண்டுக்கல், - திண்டுக்கல் காந்தி மார்க்கெட் மற்றும் ஆம்னி பஸ் பிரச்சனைக்கு மாநகராட்சி சார்பில் நிரந்தர தீர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சியாக இருந்த திண்டுக்கல்லை மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2012ம் ஆண்டு மாநகராட்சியாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து மாநகராட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதியுதவியும் வழங்கினார். சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களுக்கு தேவையான மேலும் பல்வேறு பணிகளை மேற்கொள்ள அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு நடத்தி அதற்கான தீர்வுகள் காணும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் காந்தி மார்க்கெட் பிரச்சனைக்குக்கும், அங்குள்ள வியாபாரிகள் நலனுக்காகவும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 1934ம் ஆண்டு மகாத்மா காந்தி பேசிய இடம் இன்றளவும் திண்டுக்கல்லில் காந்தி நாடக மேடையாக விளங்குகிறது. இதன் அருகிலேயே காந்தி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளால் கொண்டு வரப்படும் காய்கறிகள், கமிஷன் அடிப்படையில் வியாபாரிகளால் வாங்கப்பட்டு பின்னர் கடை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மேலும் மார்க்கெட் வெளியே சில்லறை விலையில் வியாபாரிகள் கடை அமைத்து விற்பனை செய்து வருகின்றனர். இருப்பினும் மழை காலங்களில் காந்தி மார்க்கெட் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனை போக்கும் வகையிலும் காந்தி மார்க்கெட்டை தரம் உயர்த்தி தரைத்தளத்துடன் கடை அமைக்கவும், பொதுமக்கள் சில்லறையிலும் இங்கு காய்கறிகள் வாங்கிச் செல்லும் வகையில் 200 புதிய கடைகள் அமைத்துத் தரவும் மாநகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வுப்பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்கெட்டில் உள்ள தற்போதுள்ள கடைகளின் எண்ணிக்கை, வெளிப்பகுதியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியதுடன் தரம் உயர்த்தப்படும் மார்க்கெட்டில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்து தருவதற்கும் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து பிரேரணை தயார் செய்யப்பட்டு அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனிடம் அதிகாரிகள் வழங்கியபிறகு விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்மூலம் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் வியாபாரிகளின் நீண்ட கால பிரச்சனைக்கும், பொதுமக்களின் கோரிக்கைக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் திண்டுக்கல் _ பழனி சாலையில் பல ஆண்டுகளாக லாரி பேட்டை செயல்பட்டு வருகிறது. இந்த இடத்தின் ஒரு பகுதியை ஆம்னி பஸ் நிறுத்தமாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகரில் இருந்து சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு ஏராளமான ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் திண்டுக்கல் பஸ் நிலையத்தின் வெளிப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டு பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். திண்டுக்கல் பஸ் நிலையம் ஏற்கனவே இட நெருக்கடி காரணமாக மிகவும் தவித்து வருகின்றது. இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பஸ் நிலைய விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் நிறைவு பெற்ற பிறகு அனைத்து பஸ்களும் வந்து செல்லும் வகையிலும், புதிய வணிக வளாகங்களுடன் தரம் உயர்த்தப்பட்ட பேருந்து நிலையமாக மாறும் என்பதில் ஐயமில்லை. இருந்த போதும் ஆம்னி பஸ்களில் செல்வோர் பஸ் நிலையத்தில் காத்துக் கிடக்கும் நிலை இருப்பதால் பல சமயங்களில் கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. எனவே லாரி பேட்டையை ஆம்னி பஸ் நிலையமாக மாற்றவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வெளியூர் செல்வதற்காக ஆம்னி பஸ்களில் புக்கிங் செய்யும் பயணிகள் பஸ் நிலையத்திற்கு வராமல் நகரின் மற்றொரு பகுதியான பழனி சாலையில் இருந்து தங்கள் பயணத்தைத் தொடர முடியும். இந்த முயற்சியும் விரைவில் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் திண்டுக்கல் நகர மக்களின் மற்றும் நீண்ட கால கோரிக்கை நிறைவேறும் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில்,