முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புல் புல் புயல் கரையை கடக்கும் போது சென்னையில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்

சனிக்கிழமை, 9 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : புல் புல் புயல் கரையை கடக்கும் போது சென்னையில் அடுத்த வாரம் மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றது. புல் புல் என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் வேறு திசையை நோக்கி சென்றதால் சென்னையில் வறண்ட வானிலை காணப்பட்டது.

இந்த நிலையில் புல் புல் புயல் கரையை கடந்த பிறகு சென்னையில் அடுத்த வாரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய இயக்குனர் கூறும் போது, புல் புல் புயல் வலுவிழந்து கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. மேக கூட்டங்கள் உருவாகுவதற்கான அறிகுறிகள் இருக்கின்றன. இதனால் அடுத்த வாரம் 15 அல்லது 16-ம் தேதி சென்னையில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். அதுவரை வானிலை வறண்டு காணப்படும் என்று தெரிவித்தார்.

ஸ்கைமெட், வானிலை மைய தலைவர் மகேஷ் பலவத் கூறும் போது, புயல் கரையை கடந்த பிறகு காற்றின் திசை மீண்டும் மாறி தென்மேற்கு கடலோரம் நோக்கி நகரும். அதன் மூலம் வடமேற்கு திசையில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக சென்னையில் மழை பெய்யும். ஆனால் இந்த மழை பெரிய அளவில் இருக்காது மிதமான மழையாகவே இருக்கலாம் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து