முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் மரியாதை

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்திரா காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மேகன் சிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். இதே போல் நாடு முழுவதிலும் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு, அந்தந்த பகுதி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

 மேலும் இந்திரா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு பல்வேறு தலைவர்கள் டுவிட்டர் மூலம் பதிவிட்டு இந்திரா காந்தியின் நினைவுகளை பகிர்ந்துள்ளனர். நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளில், அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட் செய்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவிடம் நோக்கி ஊர்வலம் நடைபெற்றது. இதில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சீனிவாஸ், முன்னாள் தலைவர் மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சாதவ் ராஜீவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து