முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது - மக்களவையில் பா.ஜ.க. எம்.பி. குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இந்திய பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் பா.ஜ.க. எம்.பி. தெரிவித்தார்.

அருணாச்சல பிரதேச மாநிலம் மீது உரிமை கொண்டாடும் சீனா, அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் அத்துமீறி நுழையும் சம்பவம் எப்போதாவது நடைபெற்று வருகிறது. பின்னர் இந்தியாவின் கடும் எதிர்ப்பையடுத்து பின்வாங்கி செல்கிறது. இந்த சூழலில்,  நேற்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய, அருணாச்சல பிரதேச கிழக்கு தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான தபிர் கோவா, இந்திய பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் 50  முதல் 60 கி.மீட்டர் வரையிலான இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்.  டோக்லாம் பகுதியில் ஏற்பட்ட மோதலை போன்று வரும் காலத்தில் அருணாச்சல பிரதேசத்திலும் ஏற்படும். எனவே,  மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  மேலும், அருணாச்சல பிரதேசத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சென்ற போது சீனா ஆட்சேபம் தெரிவித்ததையும் தனது பேச்சின் போது தபிர் கோவா சுட்டிக்காட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து