முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க எதிர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      இந்தியா
Image Unavailable

மகாராஷ்டிராவில், சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது. ஆட்சி அமைப்பது தொடர்பாக 3 கட்சியினரும் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஆட்சி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த எஸ்.ஐ. சிங், சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், மக்கள் உத்தரவுக்கு எதிராக, மாநிலத்தில் ஆட்சி அமைக்க சிவசேனா, காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியை அமைக்க முயற்சி செய்கிறது. இக்கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என கவர்னருக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து