முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமசாமி படையாட்சியார் மணி மண்டபம் இன்று திறப்பு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 22 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

கடலுாரில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இது குறித்து அகில இந்திய வன்னிய சேனா நிறுவனத் தலைவரும், பா.ஜ.க. பிரமுகருமான வீரவன்னியராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வன்னிய சமூக மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கை பொருளாதார மேம்பாட்டிற்காக உழைத்தவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மணிமண்டபத்தை தங்களது திருக்கரங்களால் திறந்து வைக்கிறார்கள். தற்போதைய தமிழக அரசுதான் வன்னிய மக்களின் உணர்வுகளை புரிந்து, வன்னிய மக்களுக்காக போராடிய ராமசாமி படையாட்சியருக்கு ரூ. 2 கோடி செலவில்  மணிமண்டபத்தை அவர் பிறந்த கடலுார் மண்ணில் நிறுவியுள்ளது மிக மிக பாராட்டிற்குரியது. அது மட்டுமின்றி வன்னிய சமுதாய மக்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை பாதுகாப்பதற்காக 2018-ல் சட்ட முன்வடிவு கொண்டு வந்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றுத் தந்த பெருமை சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தையே சாரும். அதற்காக அவரை வன்னிய சேனா சார்பில் பாராட்டுகிறோம். தமிழக சட்டப் பேரவையில் படையாட்சியாரின் படத்தை திறந்து வைத்து அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்துள்ள அ.தி.மு.க. அரசுக்கு அகில இந்திய வன்னியசேனா பாராட்டுதலையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் வீரவன்னியராஜா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து