எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தூரில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா - வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. இது பகல் - இரவாக நடத்தப்படும் போட்டி என்பது கூடுதல் விசேஷமாகும். இதனால் இந்த டெஸ்ட் இப்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
டெஸ்ட் அரங்கில் ‘நம்பர் ஒன்’ அணியாக வலம் வரும் இந்தியா முதல்முறையாக பகல் - இரவு டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் பகல் - இரவு டெஸ்டில் விளையாட தயக்கம் காட்டிய இந்திய அணி, சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரிய தலைவர் ஆனதும், சம்மதம் தெரிவித்து விட்டது. பகல் - இரவு டெஸ்டுக்கு மினுமினுப்பான இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க் பால்) பயன்படுத்தப்படுகிறது. இது தான் பேட்ஸ்மேன்களுக்கு சவால் அளிக்கக் கூடியதாகும். பிங்க் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்களின் ஜாலம் கொடிகட்டி பறக்கும். மாலைவேளையில் பந்து கண்ணுக்கு தெளிவாக தெரிவதில் சிக்கல் உள்ளது.
அதாவது சூரிய வெளிச்சம் மறைந்து, மின்னொளி எரியவிடப்படும் சமயத்தில் அதற்கு ஏற்ப பேட்ஸ்மேன்கள் தங்களை துரிதமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இந்த சமயத்தில் தான் முந்தைய பகல் - இரவு டெஸ்டுகளில் அதிகமான விக்கெட்டுகள் சரிந்துள்ளன. இந்த தடைகளை பேட்ஸ்மேன்கள் எப்படி உடைக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்திய அணியில் புஜாரா, ஜடேஜா, மயங்க் அகர்வால் உள்ளிட்டோர் 2016-ம் ஆண்டு துலீப் கோப்பைக்கான முதல்தர கிரிக்கெட்டில் பிங்க் பந்தில் விளையாடி உள்ளனர். அந்த அனுபவங்களை சக வீரர்களிடம் பகிர்ந்துள்ளது உதவிகரமாக இருக்கும். சாதனையின் விளிம்பில் உள்ள விராட் கோலி 32 ரன்கள் எடுத்தால், கேப்டனாக 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெறுவார்.
சாதகமான சூழலில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் சாதிக்கும் முனைப்புடன் வரிந்து கட்டுகிறார்கள். இந்த தொடரையும் இந்திய அணி வசப்படுத்தினால், சொந்த மண்ணில் தொடர்ச்சியாக வென்ற 12-வது தொடராக இது பதிவாகும். வங்காளதேச அணியும் இதற்கு முன்பு பகல் - இரவு டெஸ்டில் ஆடியது கிடையாது. முதலாவது டெஸ்டில் 3 நாட்களுக்குள் அடங்கிப்போன அந்த அணி இந்த டெஸ்டிலும் நிலைகொண்டு ஆடுவது சந்தேகம் தான். இருப்பினும் இந்தியாவுக்கும் இது தான் முதல் ‘பிங்க்’ டெஸ்ட் என்பதால் தங்களால் சமாளிக்க முடியும் என்று வங்காளதேச வீரர்கள் நம்புகிறார்கள்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டியை பார்க்க நிறைய பிரபலங்கள் கொல்கத்தாவில் குவிந்துள்ளனர். போட்டியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், ராகுல் டிராவிட், கும்பிளே உள்ளிட்டோர் நேரில் பார்க்க உள்ளனர். செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், பேட்மிண்டன் மங்கை பி.வி.சிந்து, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் போட்டியின் போது கவுரவிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இது 67 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட ஸ்டேடியம் என்பது நினைவு கூரத்தக்கது.
ஈடன்கார்டனில் 1934-ம் ஆண்டில் இருந்து இதுவரை 41 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 12-ல் வெற்றியும், 9-ல் தோல்வியும், 20-ல் டிராவும் கண்டுள்ளது. மொத்தம் 76 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முகமது அசாருதீன், வி.வி.எஸ்.லட்சுமண் தலா 5 சதங்கள் அடித்துள்ளனர். 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 7 விக்கெட்டுக்கு 657 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 1983-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்திய அணி 90 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி18 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 17 hours ago |
ரவா பர்பி1 week 19 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
'நான் முதல்வன்' இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
17 Apr 2024சென்னை : ‘நான் முதல்வன்’ நம் இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? - தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிடு
17 Apr 2024சென்னை : மீனவர்களுக்கு செய்தது என்னென்ன? என்பது குறித்து தி.மு.க. தலைமை பட்டியல் வெளியிட்டுள்ளது.
-
மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? - எடப்பாடி பழனிசாமி பேட்டி
17 Apr 2024சேலம் : மத்தியில் இழுபறி நிலை வந்தால் யாருக்கு ஆதரவு? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.