முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மாவட்டத்தில் 7 அணைகள் நிரம்பின: தாமிரபரணியில் கடும் வெள்ளம் கரையோர மக்கள் வெளியேற்றம்

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

நெல்லை : தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் தண்ணீர் சூழ்ந்தால் வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. இதன் காரணமாக தென் மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணை முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடை விடாது மழை கொட்டியது. கடலோர பகுதிகளிலும் கனமழை பெய்தது. தென் மாவட்டங்களில் அதிகபட்சமாக பாபநாசம் அணை பகுதியில் நேற்று காலை வரை 110 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கு தண்ணீர் கரைபுரண்டு வந்தது. இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு நேற்று காலை வினாடிக்கு 14204 கன அடி தண்ணீர் அணைக்கு வந்ததால் பாபநாசம் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை வினாடிக்கு 14270 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கல்யாண தீர்த்தம், அகஸ்தியர்பட்டி அருவிகளில் தண்ணீர், பாறை தெரியாமல் வெள்ளமாக கொட்டியது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினம் அகஸ்தியர் அருவி பாலம், குறுக்குத்துறை முருகன் கோவில் மண்டபம் ஆகியவை தண்ணீரில் மூழ்கின. நேற்று காலை ஒரே நேரத்தில் 14 ஆயிரம் கன அடிக்கு மேல் திறக்கப்பட்டதால் பாபநாசம் படித்துறை யாரும் குளிக்க முடியாத அளவுக்கு மூழ்கியுள்ளது.இதுபோல அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி பகுதியிலும் அனைத்து படித்துறைகளும் மூழ்கியுள்ளன. தாமிரபரணி ஆற்றில் காட்டாற்று வெள்ளமும் கலந்து ஓடுவதால் நெல்லை பகுதியில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை முருகன் கோவில் முழுவதுமாக மூழ்கியது. கோவிலின் கோபுரம் மட்டுமே தெரிகிறது. தைப்பூச மண்டபம் உள்பட கரையோர படித்துறை மண்டபங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றுக்கு யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் தண்ணீர் சூழ்ந்தால் வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதி மக்கள் நேற்று தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக அருகில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர். தாமிரபரணி ஆறு செல்லும் பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்கள் சார்பாக அந்தந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் தற்போது 11 அணைகளில் 7 அணைகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. இதுபோல களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையிலும் இரவு முதல் பலத்த மழை பெய்துள்ளதையடுத்து களக்காட்டில் ஓடும் நாங்குநேரியான் கால்வாய், பச்சையாறு, உப்பாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நாங்குநேரியான் கால்வாயில் கரைகளை தொட்டப்படி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. களக்காடு - சிதம்பரபுரம் செல்லும் சாலையில் நாங்குநேரியான் கால்வாயில் உள்ள தரைபாலம் வெள்ளத்தில் மூழ்கியது, இதனைத்தொடர்ந்து அங்கு போக்குவரத்து தடை பட்டுள்ளது. களக்காடு பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியதை அடுத்து குளங்களுக்கு செல்லும் தண்ணீரும் ஆறுகளில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. களக்காடு மலையில் உள்ள அருவி, நீரோடைகளிலும் கடும் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. தலையணையில் காட்டாற்று வெள்ளம் கட்டுக்கடங்காமல் கரைபுரள்கிறது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் சீறி பாய்ந்து செல்கிறது.திருக்குறுங்குடி நம்பியாற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. திருமலைநம்பி கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலம் வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் தொடர்ந்து மழை நீடிப்பதால் களக்காடு ஆறுகளில் கரை புரளும் வெள்ளப்பெருக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதையொட்டி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்புடன் இருக்கும் படி அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் தற்போது பெய்துவரும் கன மழையில் இந்த பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பி வருகிறது. தற்போது திருச்செந்தூர் ஆவுடையார் குளம் நிரம்பி மறுகால் விழுந்து தண்ணீர் கடலுக்கு செல்கிறது. இதனால் வாய்க்கால் நிரம்பி வழிகிறது.இதன் உபரி நீர் மற்றும் மழை நீர் குமாரபுரம் ஊருக்குள் புகுந்து வீட்டைச்சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது, மழை நீர் வீட்டுக்குள் புகுந்துள்ளதால் இந்த பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியேவர முடியாத நிலை உள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து