முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி 5-ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட அமைதி பேரணி - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

சனிக்கிழமை, 30 நவம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவுநாளையொட்டி வரும் 5-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்

ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பிரம்மாண்ட அமைதி பேரணி நடத்தப்பட்டு, ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அதைத் தொடர்ந்து அவரது நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்கப்படும் என்றும் அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

தமிழக மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிரந்தரப் பொதுச் செயலாளர்  ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தி விட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016. அவரது 3-ம் ஆண்டு நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணியளவில், சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலையில் இருந்து, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணைமுதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக புறப்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்துகின்றனர். அதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில், தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்ளும்;, எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளும், அ.தி.மு.க.வினரும் பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து