முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவமழை நிவாரண பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி இன்று ஆலோசனை

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பருவமழை நிவாரணப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழை பதிவாகி உள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் பருவமழையையொட்டி நிவாரணப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். பருவ மழையையொட்டி எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழை பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து