முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மருத்துவ மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : டெல்லி மருத்துவ மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளின் கருணை மனுவை டெல்லி மாநில அரசு நிராகரித்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 - ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 வாலிபர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 வாலிபர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணைக்கு பின்னர் 6 பேரில் 5 வாலிபர்கள் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். ஒருவர் சிறார் என்பதால் சிறுவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு பிறகு தண்டனையில் இருந்து தப்பினான். மற்ற 5 வாலிபர்களில் முக்கிய குற்றவாளியான ராம்சிங் டெல்லி திகார் ஜெயிலுக்குள் தற்கொலை செய்து கொண்டான். இதனால் மற்ற 4 வாலிபர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. பவன்குப்தா, முகேஷ்சிங், தனேஷ் சர்மா, அக்ஷய்தாகூர் ஆகிய 4 வாலிபர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. சுப்ரீம் கோர்ட்டு அந்த தீர்ப்பை உறுதி செய்தது.

இதையடுத்து அவர்களை தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அவர்கள் 4 பேரும் தங்களது தண்டனையை குறைக்க வேண்டும் என்று கருணை மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த கருணை மனுக்கள் மீதான ஆய்வை டெல்லி கவர்னர் செய்து வந்தார். 4 குற்றவாளிகளின் கருணை மனுக்களை அவர் தள்ளுபடி செய்தார். அதோடு கோர்ட்டு உத்தரவுபடி 4 வாலிபர்களையும் தூக்கில் போடவும் அவர் பரிந்துரைத்தார். இதையடுத்து 4 குற்றவாளிகளின் கருணை மனு மத்திய உள்துறையின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து