முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்: அமித்ஷா

திங்கட்கிழமை, 2 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சட்ட விரோதமாக குடியேறியவர்கள் 2024-க்குள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்டில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சரும் பாஜகவின் தேசிய தலைவருமான அமித்ஷா கூறியதாவது:- “ பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல்கள் ஒழிக்கப்பட்டுள்ளனர். மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த சாதனையை செய்துள்ளன. இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் 2024-ம் ஆண்டுக்குள் கட்டாயம் வெளியேற்றப்படுவார்கள். 2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்கு வந்துவிடும், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து