எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மழை வெள்ள அபாயம் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது மழை வெள்ளத்தை சந்திக்க அனைத்து நிலைகளிலும் தயாராக இருக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
4, 399 பாதிப்பு பகுதிகள் கண்டுபிடிப்பு
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கடந்த 29-ம் தேதி வெளியிட்ட வானிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்து வரும் சில நாட்களுக்கு கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவ்வப்போது அறிவுரை வழங்கி, தகுந்த உத்தரவுகளை வழங்கி வருகிறார். அதன் தொடர்ச்சியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக கடந்த செப்டம்பர் 23-ம் தேதி மற்றும் அக்டோபர் 22 ஆகிய தேதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வடகிழக்கு பருவ மழை தொடர்பாக எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தமாக அனைத்து துறைகளின் உயர் அலுவலர்களுக்கும், மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கினார். கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும், நேரடியாக ஆயத்த பணிகளை மேற்கொள்ளவும் முதல்வர் எற்கனவே உத்தரவிட்டிருந்தார்.
இதைத் தவிர, செப்டம்பர் 24 மற்றும் அக்டோபர் 4 ஆகிய இரு தினங்களில் தலைமைச் செயலாளர் தலைமையில் அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்களின் ஆய்வுக் கூட்டங்களும் நடைபெற்றன. வடகிழக்குப் பருவ மழையினால் உடனடியாக பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய 4,399 பகுதிகள் கண்டறியப்பட்டு, பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 639 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9,162 பெண்கள் அடங்கிய 21,597 எண்ணிக்கையிலான முதல்நிலை மீட்பாளர்களும், கால்நடைகளை பாதுகாக்க 8,871 முதல்நிலை மீட்பாளர்களும், மழை காலங்களில் சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றுவதற்கும் 9,909 முதல்நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
தயார்நிலையில் தமிழக அரசு
பேரிடர் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும், நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளாக, 17,866 தடுப்பணைகள் கட்டப்பட்டு, 14,946 கசிவு நீர் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 9,250 நீர் செறிவூட்டும் கிணறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தப்படாத 11,080 ஆழ்துளைக் கிணறுகளும், 3,434 திறந்தவெளி கிணறுகளும், நீர் செறிவூட்டும் கிணறுகளாக மாற்றப்பட்டுள்ளன. 3,174 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆற்றுப்படுகைகள் தூர்வாரப்பட்டன. 3,662 ஆற்றுப்படுகைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. 8,749 பாலங்கள் மற்றும் 1,40,228 சிறுபாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளன. மேலும், முடிவு பெறாத பணிகளை உடனடியாக விரைந்து முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.
மாநிலத்தில் உள்ள தாழ்வான மற்றும் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் பொருட்டு 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களைத் தவிர, 4,768 பள்ளிகள், 105 கல்லூரிகள், 2,394 திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மாவட்டங்களில் 3,915 மரம் அறுக்கும் இயந்திரங்கள், 2,897 ஜே.சி.பி இயந்திரங்கள், 2,115 ஜெனரேட்டர்கள் மற்றும் 483 ராட்சத பம்புகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனத்தால், ஒரு லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பயிற்சியளிக்கப்பட்ட மீட்பாளர்கள்
நடமாடும் முதல்நிலை மீட்பாளர் குழு ஒவ்வொரு பகுதி / வட்டம் / மண்டல வாரியாக அமைக்கப்பட்டு, அக்குழுக்களுக்கு மாவட்ட அளவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1,000 காவலர்களைக் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை தவிர, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரிடம் பயிற்சி பெற்ற 4,155 காவலர்கள் (சென்னை நீங்கலாக) அனைத்து கடலோர மாவட்டங்களிலும், 1,844 காவலர்கள் இதர மாவட்டங்களிலும், சென்னை மாவட்டத்தில் 607 காவலர்களும் ஆக மொத்தம் 6,606 பயிற்சி பெற்ற காவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் கீழ் 4,537 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 1,400 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், 2,000 நபர்களுக்கு ஒத்திகைப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு பேரிடர் குறித்த தகவல்கள் தெரிவிக்க, மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் (1070), மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் (1077), tnsmart செயலி மற்றும் சமூக வலைதளம், மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவுரை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி பருவமழை காலத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். மழை காலங்களில் கீழே விழும் மரங்களை உடனே அகற்ற தேவையான ஆட்கள் மற்றும் மரம் அறுக்கும் இயந்திரங்கள் மற்றும் மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுக்கள் விரைவில் சென்றடைய ஏதுவாக, தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழையின் காரணமாக வயிற்றுப் போக்கு மற்றும் தொற்று நோய் ஏதும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போதுமான அளவில் மற்றும் தேவையான மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும். தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்க வேண்டும்.
மேலும், தடையின்றி மின்சாரம் வழங்கும் வகையில், போதிய ஜெனரேட்டர் வசதிகளையும் ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும்.பேரிடர் காலங்களில் பற்றாக்குறையினை தவிர்க்கும் பொருட்டு இரண்டு மாத காலத்திற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்கள் நியாய விலைக்கடைகளில் போதுமான அளவில் இருப்பில் வைக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் ஒருங்கிணைக்க வேண்டும்
கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள இந்திய கலெக்டர்கள் நிலையிலான அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களில் / பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை காலத்தில் உயிர் சேதம் மற்றும் பொருட் சேதம் ஏற்படாமல் தவிர்க்க, அனைத்து அரசுத் துறையினைச் சார்ந்த செயலர்களும், துறைத் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நீர்தேக்கங்களும் கண்காணிக்கப்பட்டு வர வேண்டும். மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட இடங்களில் மழைநீர் துரிதமாக வெளியேற்ற வேண்டும். ஆற்றின் கரையோரம் உள்ள மக்களை மேடான இடங்களுக்கு உடனடியாக அழைத்துச் செல்ல வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வலியுறுத்தினர்.
மழையால் உயிரிழப்பு
போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள இடங்களில், உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்தினை சீரமைக்கவும், உயர் மட்டப் பாலங்கள் தேவைப்படும் இடங்களுக்கு நீண்ட கால பேரிடர் தணிப்பு நடவடிக்கையாக உரிய முன்மொழிவுகளை உடனடியாக அனுப்பவும் முதல்வர் உத்தரவிட்டார். சூறாவளி, வெள்ளம், இடி மற்றும் மின்னல் தொடர்பாக தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு குறும்படங்களை பார்வையிட்டு, இந்தக் குறும்படங்களை பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் திரையரங்குகள் மற்றும் கேபிள் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பவும் உத்தரவிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வட்டத்தில், 1-ம் தேதி பெய்த கன மழையின் காரணமாக, சிக்க தாசம்பாளையம் நடூர் கிராமத்தில் கண்ணப்பன் லே அவுட் பகுதியில் சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் உள்ள அரசு தொகுப்பு வீடுகளின் மேல் விழுந்ததினால், ஒரு தொகுப்பு வீடு மற்றும் மூன்று வில்லை வீடுகள் முற்றிலும் சேதமுற்றன. மீட்புப் பணியில், வருவாய்த் துறையினர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினைச் சார்ந்த வீரர்கள் ஈடுபட்டனர். இந்த வீடுகளில் குடியிருந்த, 10 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் 2 குழந்தைகள் (1 பெண் + 1 ஆண்) உள்பட மொத்தம் 15 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
தலா ரூ.4 லட்சம் நிதியுதவி
மேலும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினரும் மீட்புப் பணிகளுக்காக சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4. லட்சம் உடனடியாக வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். மேற்கூறிய 15 நபர்கள் தவிர, மேலும் 2 நபர்கள் இந்த சம்பவத்தில் தற்போது இறந்துள்ள நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சம் உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.
மழையால் பலியானோர்க்கு நிதி
தமிழகத்தில் 29, 30, மற்றும் டிசம்பர் 1-ம் தேதிகளில் பரவலாக பெய்த கன மழையின் காரணமாக, பல்வேறு நிகழ்வுகளில் 8 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 8 நபர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், 58 கால்நடை இழப்புகள் ஏற்பட்டுள்ளதோடு, 1305 குடிசை வீடுகளும், 465 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. மேற்கூறிய இனங்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகை வழங்கவும் உத்தரவிட்டார். கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக இடுபொருள் மானியம் வழங்கவும், காப்பீட்டுத் தொகையினை பெற்றுத் தரவும், காப்பீட்டுக் காலத்தை நீட்டிப்பு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்கள். கடலூர் மாவட்டத்தில் 805 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 38 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் 73 நபர்கள் 2 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனடியாக செய்து கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டி.ஜெயகுமார், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் / கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், வருவாய்த் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நிதித் துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய் நிர்வாக ஆணையர் / முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, எரிசக்தி துறை முதன்மைச் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) தீரஜ் குமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.