முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாமின் பெற்ற முதல் நாளிலேயே நிபந்தனையை மீறி விட்டார் சிதம்பரம் - மத்திய அமைச்சர் ஜவடேகர் குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : சிதம்பரம் முதல் நாளிலேயே ஜாமீன் நிபந்தனையை மீறி விட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 106 நாட்களுக்குப் பிறகு அவர் நேற்று முன்தினம் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று பாராளுமன்றம் வந்த அவர், வெங்காய விலை உயர்வை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் இணைந்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர் மாநிலங்களவைக்குச் சென்று கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நான் அமைச்சராக இருந்த போது எனது நிலைப்பாடு தெளிவானது. என்னுடன் பணியாற்றிய அதிகாரிகள், கலந்துரையாடிய தொழிலதிபர்கள், என்னை கவனித்து வரும் பத்திரிகையாளர்கள் என அனைவருக்கும் இது பற்றி தெரியும் எனக் கூறினார். இதற்கு பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்,  ஐ.என்.எக்ஸ். வழக்கில் ஜாமீன் பெற்று முதல் நாளிலேயே நிபந்தனையை மீறி விட்டார். வழக்கு தொடர்பாக பொது வெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்து இருந்தது. ஆனால் அவர் தான் அமைச்சராக இருந்தபோது தெளிவுடனும், நேர்மையுடனும் நடந்து கொண்டதாக கூறி இருக்கிறார். இந்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து