எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் பெற்ற வெற்றியைப் போல், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம் என்று ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சபதம் மேற்கொண்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அ.தி.மு.க. சார்பில் பிரம்மாண்டமான அமைதி பேரணி சென்னை அண்ணாசாலை அண்ணாசிலை அருகில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த பேரணிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணை்ப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கி்ணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அண்ணா சாலையில் இருந்து புறப்பட்ட இந்த அமைதி பேரணி, வாலாஜா சாலை, வழியாக கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை வந்தடைந்தது. அங்கு கருப்பு சட்டை அணிந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமையில் அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். முதல்வரும், துணை முதல்வரும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு மண்டியிட்டு வணங்கி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ மேடையில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க, அதனை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திருப்பி சொல்ல உறுதியெடுத்து கொண்டனர். அதன் விபரம் வருமாறு:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா , தமிழ் நாட்டு அரசியலில் புதிய சரித்திரங்களைப் படைத்த சாதனைச் செம்மல். சமூக நீதியில் உறுதியான நம்பிக்கை, பெண் விடுதலையில் அசைக்க முடியாத பற்றுறுதி, மதச்சார்பற்ற உறுதியான இறை நம்பிக்கை, எளியோருக்கு சமூகப், பொருளாதார பாதுகாப்பு அளிப்பதில் அர்ப்பணிப்பு உணர்வோடு தனது அரசியல் பாதையை புதுமையும், புரட்சியும் நிறைந்த போர்ப் பாதையாக மாற்றி வாழ்ந்தவர் நம் அம்மா. ஜெயலலிதாவால், தமிழ்நாடு அடைந்திட்ட வளர்ச்சிகளை, மக்களுக்கு எந்நாளும் எடுத்துக் கூறிட உறுதி ஏற்கிறோம்.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய, அ.தி.மு.க.வை தனது ஒப்பற்ற அறிவாற்றலால், கடின உழைப்பால், எண்ணற்ற தியாகங்களால், ஆயிரம் காலத்துப் பயிராக நிலைபெறச் செய்த ஜெயலலிதா வழியில், கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றிடுவோம். எம்.ஜி.ஆரின் தொண்டராக பொது வாழ்வைத் தொடங்கி, அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக, பொதுச் செயலாளராக, 34 ஆண்டுகள் தன்னையே அர்ப்பணித்துப் பணியாற்றிய ஜெயலலிதாவின் மகத்தான தியாகத்தை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவோம். அவரது நிலைத்த புகழுக்குப் பெரும் புகழ் சேர்ப்போம். மக்களால் நான், மக்களுக்காகவே நான். உங்களால் நான், உங்களுக்காகவே நான். அமைதி, வளம், வளர்ச்சி என்ற பாதையில், நொடிதோறும் தன்வாழ்வை, மக்களுக்கான தியாக வாழ்வாக வாழ்ந்த ஜெயலலிதாவின் கட்டளையை ஏற்போம். கழகம் நமக்கு என்ன செய்தது? என்பதைவிட, கழகத்திற்கு நாம் என்ன செய்தோம்? என்ற கேள்வியை நம் இதயத்தில் எழுப்பி ஒற்றுமையுடனும், உறுதியுடனும் கழகப் பணிகளை ஆற்றிடுவோம்.
எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அ.தி.மு.க. மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் சூளுரையை மனதில் கொள்வோம். தமிழக மக்களுக்காக, அ.தி.மு.க. அரசு, மேற்கொண்டிருக்கும் மக்கள் நலப் பணிகளை, பட்டி தொட்டி எங்கும் எடுத்துரைப்போம். தமிழக மக்களிடையே அ.தி.மு.க. அரசுக்கு, மென்மேலும் நல்லாதரவு பெருகிட அயராது பணியாற்றுவோம். தமிழ் நாட்டு மக்களின் உயர்வும், மகிழ்ச்சியுமே, தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு ஏழை, எளியோருக்கும், பெண்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும், நிகரில்லாத் திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்காது நிறைந்திருக்கும் ஜெயலலிதா அமைத்துத் தந்த அ.தி.மு.க. அரசினை வெற்றிமேல் வெற்றி பெறச் செய்வோம்.
அ.தி.மு.க.வின் இதயமாய் வாழ்ந்து, ஓய்வறியாத ஒப்பற்ற உழைப்பின் மூலம் இந்த இயக்கத்தை வளர்த்து கட்டிக்காத்து புகழ்பெறச் செய்த ஜெயலலிதாவின் வழியில், அ.தி.மு.க.வின் உண்மைத் தொண்டராகவும், நம்பிக்கைக்குரிய விசுவாசியாகவும் தொடர்ந்து உழைத்திடுவோம். ஜெயலலிதா வழிகாட்டுதலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தலில் ஒற்றுமையாகவும், கடினமாகவும் உழைத்து மகத்தான வெற்றியைப் பெற்றது போல, எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று அ.தி.மு.க.வை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம்.
அ.தி.மு.க. அரசை தனது ஒப்பற்ற உழைப்பினால், உறுதிமிக்க கோட்டையாக மாற்றியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டை தனது கடும் உழைப்பினால் அமைதிப் பூங்காவாக மாற்றியவர். எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதற்காக திட்டங்கள் பல தீட்டியவர் ஜெயலலிதா. ஏழை, எளியோருக்கு ஏற்றமிகு திட்டங்களைத் தீட்டியவர் ஜெயலலிதா. நடுத்தர மக்களுக்கு நல்ல பல திட்டங்கள் தீட்டியவர் ஜெயலலிதா. தமிழ் நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கியவர் ஜெயலலிதா. அவரது வழியில், நாமும் சாதனை படைப்போம். மக்களுக்காக இன்னும் பல திட்டங்கள் படைப்போம். இருந்தபோதும் நம் அம்மா. மறைந்த பிறகும் நம் அம்மா. அப்போதும் நம் அம்மா. இப்போதும் நம் அம்மா. எப்போதும் நம் அம்மா. அந்த இதய தெய்வத்தின் வழியில் காப்போம், காப்போம். கழகத்தைக் காப்போம் !வெல்வோம், வெல்வோம். களம் அனைத்திலும் வெல்வோம். இவ்வாறு அ.தி.மு.க.வினர் சபதம் மேற்கொண்டனர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.