முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று தலைமைக் கழகத்தில் நடக்கிறது

வியாழக்கிழமை, 5 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் கூட்டம் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இன்று கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் மட்டுமே தற்போது நடைபெறும் என்றும் நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல்கள் பின்னர் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் வார்டு வரையறை செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறும் என்றும் இந்த கூட்டத்திற்கு பின்னர் நீதிமன்றத் தீர்ப்புக்கேற்ப அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து