முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.சி.சி.ஐ.-யின் 2020-ம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்த பட்டியல் வெளியீடு - டோனியின் பெயர் நீக்கம்:ரசிகர்கள் அதிர்ச்சி

வியாழக்கிழமை, 16 ஜனவரி 2020      விளையாட்டு
Image Unavailable

மும்பை : பி.சி.சி.ஐ-யின் 2020-ம் ஆண்டு வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி பெயர் இடம்பெறவில்லை. பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள  அறிவிப்பில், ஏ பிளஸ் கிரேடு பட்டியலில் விராட் கோலி,ரோகித் சர்மா மற்றும் பும்ரா இடம்பெற்றுள்ளனர். ஏ கிரேடு பட்டியலில் அஸ்வின், ஜடேஜா, புவனேஸ்வர் குமார், முகமது சமி உள்ளிட்டோர் இடம்பிடித்தனர். மேலும் புஜாரா, தவான், ராகுல், ரஹானே, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், ரிஷப பந்த்தும் ஏ கிரேடில் உள்ளனர்.

இதனையடுத்து பி கிரேடில் விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்ட்யா, மாயங் அகர்வால் உள்ளனர். சி கிரேடில் கேதர் ஜாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், மணீஷ் பாண்டே, ஹனுமா விஹாரி உள்ளனர். மேலும் ஷர்துல் தாகூர், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தரும் பி.சி.சி.ஐ.-யின் சி கிரேடு பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான வீரர்களின் ஒப்பந்த பட்டியலை பி.சி.சி.ஐ வெளியிட்டது. அதன்படி ஏ பிளஸ் பட்டியலில் உள்ளவர்களுக்கு 7 கோடி ஊதியமும், ஏ கிரேடு பட்டியலில் உள்ளவரகளுக்கு 5 கோடிஊதியமும் வழங்கப்படும். மேலும் பி கிரேடு பட்டியலில் உள்ளவர்களுக்கு 3 கோடி ஊதியமும், சி கிரேடு பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒரு கோடி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து