முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே. வங்க பா.ஜ.க. தலைவராக திலீப் கோஷ் மீண்டும் தேர்வு

வெள்ளிக்கிழமை, 17 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்க பா.ஜ.க. தலைவராக திலீப் கோஷை கட்சி மேலிடம் கடந்த 2015-ம் ஆண்டு நியமித்தது. அவரது பதவிக் காலம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்தது. எனினும், கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அவர் மாநில கட்சித் தலைவராக நீடித்தார்.

இந்நிலையில், மேற்குவங்க பா.ஜ.க. கமிட்டிக் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தலைவராக திலீப் கோஷ் ஒருமனதாக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் 3 ஆண்டுகள் மாநில கட்சித் தலைவர் பதவி வகிப்பார். இதுகுறித்து திலீப் கோஷ் கூறும் போது, வரும் 2021-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறும் நோக்குடன் செயல்படுவோம் என்று தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து