எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஜெயலலிதாவின் 72 - வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாட ஜெயலலிதா பேரவை முடிவு செய்துள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 72 - வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஜெயலலிதா பேரவை சார்பில் நேற்று அதி.மு.க. தலைமை கழகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஜெயலலிதா பேரவை செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமை வகித்தார். முதலமைச்சரும், அ தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கி பேசினார்கள்.
கூட்டத்திற்கு அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான கடம்பூர் ராஜூ, தேனி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பி. ரவீந்திரநாத்குமார் எம்.பி., சேலம் மாவட்ட செயலாளர் ஆர். இளங்கோவன் மற்றும் கே.தமிழரசன், எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ., என்.சதன் பிரபாகர் எம்.எல்.ஏ., பா.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில பேரவை நிர்வாகிகள் டாக்டர் ஜெயவர்த்தன், பெரும்பாக்கம் ஏ.ராஜசேகர், கே.ஏ.கே.முகில், சி.பி. மூவேந்தன், கே.எஸ். சீனிவாசன் மற்றும் பலர் வரவேற்று பேசினார்கள்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி. சண்முகம், ஆர்.காமராஜ், கே.பி.அன்பழகன், கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர், சேவூர் ராமச்சந்திரன், இலக்கிய அணிச் செயலாளரும், தமிழ் நாடு பாடநூல் நிறுவன தலைவருமான பா.வளர்மதி, விவசாயப் பிரிவுச் செயலாளர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் என்.ஆர். சிவபதி, அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி. பிரபாகர், மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் மா. இளங்கோவன் நன்றி கூறினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
இளைஞர் எழுச்சி நாள்
தாய்திருநாட்டு மக்களின் நலனும், உயர்வும், வளமும், மகிழ்ச்சியுமே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டு ஏழை, எளியோருக்கும், தாய்மார்களுக்கும், பெண் குலத்திற்கும், மாணவ சமுதாயத்திற்கும், இளைய சமுதாயத்திற்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், பாமரருக்கும், படித்தவர்களுக்கும், பட்டம் பெற்றவர்களுக்கும், சாமானியருக்கும், உழைக்கும் மக்களுக்கும், சாதி, மத, இன வேறுபாடின்றி, அனைத்து மக்களின் நல்வாழ்விற்கு ஈடு இணையற்ற எண்ணிலடங்கா திட்டங்களை செயல்படுத்தி, அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, இன்றைக்கு அன்னைத் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் நீங்காது, முழுமதியாக இதய தெய்வமாக இடம் பிடித்திருக்கும் தமிழர்குலச்சாமி அம்மாவின் 72 - வது பிறந்த நாளை, இப்பூவுலகில் அவதரித்த திருநாளை ஆண்டுமுழுவதும் ‘‘இளைஞர் எழுச்சி நாளாக” கடைபிடித்திடுவோம்.
அன்னதானம், ரத்ததானம்
இப்புனித திருநாளை முன்னிட்டு, ஜெயலலிதா பேரவையின் சார்பில், ஏழை எளியோருக்கும், மாணவ மாணவியருக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும், விவசாயிகளுக்கும், சாமானியர்களுக்கும் உதவி செய்கின்ற வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற விழாக்கள் பல நடத்திடவும், அன்னதானம், ரத்ததானம், கண்தானம், உடல் உறுப்பு தானம் போன்ற தான தர்மங்களை தமிழர்குலச்சாமி அம்மாவின் திருப்பெயரில் செய்திடவும், இளைஞர் சமுதாயத்திற்காக விளையாட்டுப் போட்டிகள், பெண்களுக்கு கோலப் போட்டிகள் மற்றும் வீர விளையாட்டுகள் பல நடத்திடவும் மேலும் ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மணமகன், மணமகளை தேர்வு செய்து, அம்மாவின் திருப்பெயரால் இலவச திருமணங்களை நடத்திடவும், ஓய்வறியாது, ஊன் உறக்கம் பாராது, தன்னுடைய அயராத உழைப்பால் கழகத்தை கட்டிக் காத்து கழகத்திற்கு உலகப் புகழை பெற்று தந்திட்ட நம் அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடியின் தலைமையிலும், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.சின் தலைமையிலும் கழகத்தின் விசுவாசமிக்க தொண்டராக நாம் அனைவரும் நாளும் அயராது சோர்வில்லாமல் உழைத்து, அம்மாவின் புகழ் அகிலமெங்கும், ‘‘அழியா புகழாக”, ‘‘மங்கா புகழாக” நீடித்து நிலைத்து நிற்க, ஜெயலலிதா பேரவை உறுதி ஏற்கிறது. இவ்வாறு மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த ஆலோசனை கூட்டத்தையொட்டி தலைமைக் கழக வளாக நுழைவு வாயில் பழங்கள், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு பெரிய ரோஜாப் பூ மாலை அணிவிக்கப்பட்டிருந்தது. தலைமைக் கழக நுழைவு வாயல் முன்பு பெரிய ஜெயலலிதா படம் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் நிர்வாகிகள் ரோஜா மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நுழைவு வாயல் முன்பு நின்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அனைவரையும் வரவேற்றார்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு பட்டு வேட்டி அணிவித்து அமைச்சர் வரவேற்றார். தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வரவேற்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.