எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ‘‘அம்மா அரசின் ஈடு இணையில்லா தமிழ்வளர்ச்சி சாதனைத் திட்டங்கள் மீண்டும் மீண்டும் தொடரும். அது, வள்ளல் பாரி உவந்தளித்த தேரிலே, தொட்டுத் தொடர்ந்த முல்லையின் கொடியைப்போல், மக்கள் உள்ளங்களில் பற்றிப் படரும்’’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகிழ்ச்சியோடு கூறினார்.
நேற்று திருவள்ளுவர் தினம் விழா – தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் கூறியதாவது:–
திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் சிறப்பு சேர்த்து, புகழ் பரப்பவும், தமிழ் இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சென்று பெருமைப்படுத்தவும், தமிழுக்கு தொண்டு செய்து தமிழ் மொழியை அழியாது காத்து மென்மேலும் வளர்ச்சி காணவும் எண்ணற்ற திட்டங்களை, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அம்மா ஆகியோர் செயல்படுத்தினார்கள்.
தமிழ்ப் புலவர்கள் மத்தியில் மட்டுமே பயன்படுத்தப்பட்டுவந்த திருவள்ளுவர் ஆண்டு” நடைமுறையை, அனைத்து அரசு ஆவணங்களிலும் அதிகாரப் பூர்வமாக பயன்படுத்திட வேண்டும் என்று 1981 ஆம் ஆண்டில் மதுரையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் அறிவித்து, அரசாணை பிறப்பித்தவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
வள்ளுவப் பெருந்தகைக்கு சிறப்பு சேர்த்து, அவர் காட்டிய நெறிமுறையில் இலக்கியச் சிறப்பைக் கொண்ட தமிழ்ச் சான்றோரை, கௌரவப்படுத்திட முதன்முதலாக திருவள்ளுவர் விருதை ஏற்படுத்தியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
தமிழ் மொழி காக்கவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், அரும்பாடுபட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களது வழி நின்று, தஞ்சைத் தரணியில் உலகத் தமிழ் மாநாடு நடத்தி, மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் கண்டு, இன்னும் இதுபோல ஓராயிரம் திட்டங்களைத் தமிழ் வளர்ச்சிக்காகத் தந்து, கண் இமைகள், விழியைக் காப்பது போல் தன் செயல் திட்டங்களால் தமிழ் வளர்ச்சி காணச் செய்த தங்கத் தாரகை, புரட்சித் தலைவி அம்மா.
பிற மொழி பேசுபவர்களும் திருக்குறளின் சிறப்புகளை உணரவேண்டும்; வெளிநாடுகளுக்கும் வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறள் கருத்துக்கள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கோடு, உலக மற்றும் இந்திய மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்திடச் செய்தவர் அம்மா.
அம்மா காட்டிய வழியில், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படுகின்ற உதவித்தொகையை உயர்த்தி அளித்து, சிறந்த நூல்களை வெளியிடுவதற்காக நிதி உதவியை வழங்கி மாணவக் கண்மணிகளுக்கு வழங்கப்படுகின்ற பள்ளி, கல்லூரி மாணவர் இலக்கியப் போட்டிக்கான பரிசுத்தொகையை உயர்த்தி வழங்கி, தாய்மொழி நாள் விழாவைக் கொண்டாடச் செய்து, உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை, அலை கடலுக்கு அப்பாலுள்ள அமெரிக்காவில் சிகாகோ மாநகரில் சிறப்புடன் நடத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அம்மாவின் அரசு தமிழ்ப்பணிக்கே தன்னை அர்ப்பணித்து சிறப்புடன், செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, சமீபத்தில் ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட அம்மா அரசு ரூ.1 கோடி அளித்துள்ளது.
அந்தத் தமிழ் உணர்வு ஒரு துளி அளவும் குறைந்திடாமல், தமிழ் அறிஞர் பெருமக்களுக்கும், தன்னலமின்றி தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் தொண்டு செய்யும் பெரியோர்களுக்கும், இன்று இவ்விழாவில் விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன.
விருது பெறும் பெரியோர் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது சிறந்த தமிழ் தொண்டு தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
விருது பெற்றவர்கள் யார் – யார்?
திருவள்ளூவர் விருதுகள் மற்றும் தமிழ் புத்தாண்டு விருதுகளை நேற்று காலை கலைவாணர் அரங்கத்தில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். 2020ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது – ந. நித்தியானந்தபாரதி, 2019ஆம் ஆண்டிற்கான தந்தை பெரியார் விருது – செஞ்சி ந. இராமச்சந்திரன், அண்ணல் அம்பேத்கர் விருது – க. அருச்சுனன், பேரறிஞர் அண்ணா விருது – கோ. சமரசம், பெருந்தலைவர் காமராசர் விருது – மா.சு.மதிவாணன், மகாகவி பாரதியார் விருது – ப.சிவராஜி, பாவேந்தர் பாரதிதாசன் விருது – த. தேனிசைசெல்லப்பா, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது – சே.சுந்தரராசன், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது – மணிமேகலை கண்ணன் ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வாழ்த்து கூறினார்.
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளாக 2019–ம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருது – சிகாகோ தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது – வெற்றியழகன், உ.வே.சா விருது – வே. மகாதேவன், கம்பர் விருது – சரசுவதி இராமநாதன், சொல்லின் செல்வர் விருது – கவிதாசன், உமறுப்புலவர் விருது – லியாகத் அலிகான், ஜி.யு.போப் விருது – மரிய ஜோசப் சேவியர், இளங்கோவடிகள் விருது – கவிக்கோ ஞானச்செல்வன் (எ) கோ. திருஞானசம்பந்தம், அம்மா இலக்கிய விருது – உமையாள் முத்து, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் விருது – அசோகா சுப்பிரமணியன் (எ) சோ.கா. சுப்ரமணியன், மறைமலையடிகளார் விருது – ப. முத்துக்குமாரசுவாமி, அயோத்திதாசப் பண்டிதர் விருது – வே. பிரபாகரனுக்கும் வழங்கப்பட்டது.
சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருது – சா. முகம்மது யூசுப், க.ஜ. மஸ்தான் அலி, சிவ. முருகேசன், ந. கடிகாசலம், மரபின் மைந்தன் (முத்தையா), வத்சலா, முருகுதுரை, மாலன் (எ) வே. நாராயணன், கிருசாங்கினி (எ) பிருந்தா நாகராசன், அ. மதிவாணன் ஆகிய பத்து பேருக்கும் மற்றும் 2018ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – த. நாகராசன், மதுரை, உலகத் தமிழ்ச் சங்க விருதுகளாக: 2019ஆம் ஆண்டிற்கான இலக்கிய விருது – மலேசிய நாட்டைச் சேர்ந்த பெ. இராசேந்திரன், இலக்கண விருது – பிரான்சு நாட்டைச் சேர்ந்த முத்து கஸ்தூரிபாய், மொழியியல் விருது இலங்கை நாட்டைச் சேர்ந்த சுபதினி ரமேஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
விருது பெறுவோர் நேற்று விருதுத்தொகையாக 1லட்சம் ரூபாயும் தமிழ்த்தாய் விருது பெற்றத் தமிழ் அமைப்பிற்கு 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், இவர்கள் விருதுக்கான தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப்பட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.