எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ் வளர்ச்சித்துறையில் 5 ஆக இருந்த விருதாளர்களின் எண்ணிக்கையை 72 ஆக்கியது அம்மா அரசின் சாதனை ஆகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று காலை நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரை வருமாறு:–
உலகப் பொதுமறையான திருக்குறள் மற்றும் அதனை உலகுக்கு அருளிய திருவள்ளுவரின் பெருமையை உலகறியச் செய்யவும், தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், அம்மாவின் அரசு எடுத்த நடவடிக்கைகள் சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன். திருவள்ளுவரின் பெருமையினை உலகறியச் செய்யும் வகையில், ஆண்டுதோறும் தைத்திங்கள் 2 - ம் நாளை திருவள்ளுவர் தினமாக தமிழ்நாடு அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. அந்நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.
தமிழுக்கு பெருமை சேர்த்திடும் வகையில், தம் வாழ்நாளில் தமிழ்ப் பணியாற்றி வருவதையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ள தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. திருவள்ளுவர் பெயரில் திருவள்ளுவர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.திருக்குறளை கற்றுத் தெளிவதை விட, காட்சியில் கண்டால் எளிதில் மனதில் பதியும் என்பதால், அம்மாவின் ஆணையின்படி அரசு நிதி உதவியில் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை நாள்தோறும் மாணாக்கர்கள் மற்றும் வெளிநாட்டினர் கண்டு பயனடைந்து வருகின்றனர்.
திருவள்ளுவர் கால எழுத்தில் மீண்டும் திருக்குறளைப் பார்த்தல் வேண்டும் என்ற அவாவை நிறைவேற்ற, திருக்குறளை வள்ளுவர் வாழ்ந்த கால வரிவடிவில் எழுதிட, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன் முயற்சியின் விளைவாக ‘‘திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்” என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர், தமிழ் மூதாட்டி ஔவையார், கவிச்சக்கரவர்த்தி கம்பர், இளங்கோ அடிகளார், தமிழ் அறிஞர் ராபர்ட் கால்டுவெல், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளார் மற்றும் தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரனார் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் மாலை அணிவித்தும், அவர்தம் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும், அவர்தம் தமிழ்த் தொண்டினையும், படைப்பாற்றல்களையும் மனதில் தாங்கி வணக்கம் செலுத்தும் அற்புத நிகழ்வு தொடர்ந்து அரசால் நடத்தப்பட்டு வருகிறது.
பேறிஞர் அண்ணா இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டையும், புரட்சித் தலைவர் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டையும், அம்மா எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டையும் நடத்தி தமிழுக்கு பெருமை சேர்த்தார்கள்.
தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் புரட்சித் தலைவரால் 1981 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் மொழியின் வளம் பற்றி உலக மக்கள் அறிவதற்கு ஏதுவாக, திருக்குறள் தவிர மீதமுள்ள பதினெண் கீழ்க்கணக்கு நூல்களை உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும், இந்திய மொழிகளான இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு, 19.12.2019 அன்று என்னால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்த தொல்காப்பியரின் சிலை 10.3.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.
தமிழ் மொழிக்கு பெருமை சேர்ப்பது அதன் சொல் வளமே ஆகும். தமிழ் மொழியின் சொல் வளத்தை காப்பது, சொல் வளத்தை பெருக்குவது, பிற மொழிக் கலப்பை தவிர்க்க துணை நிற்பது போன்ற நோக்கங்களின் அடிப்படையில் ‘சொற்குவை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று என்னால் சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழில் உள்ள அனைத்துச் சொற்களையும் ஒரே தளத்தில் நிரல்படுத்தி வழங்குவதற்காக பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெற்று சொற்குவை திட்டம் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தமிழ்நாடு அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹுஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழ்நாடு அரசின் பங்குத் தொகையாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கழக ஆட்சிப் பொறுப்பேற்கும் போதெல்லாம், தமிழ் அறிஞர்களை பெருமைப்படுத்தும் விதமாக, அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விருதுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வந்துள்ளது. அந்த வகையில், தமிழ் வளர்ச்சித் துறையில், 5ஆக இருந்த விருதாளர்களின் எண்ணிக்கை, தற்போது 72 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது போன்று எண்ணற்ற சாதனைகள் அம்மாவின் அரசால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.