முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ராஜபாதையில் நடந்து சென்று மக்களை பார்த்து கையசைத்த மோடி

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பாதுகாப்பு பிரச்சினை பற்றி கருத்தில் கொள்ளாமல் டெல்லி ராஜபாதையில் நடந்து சென்று அங்கிருந்து பொதுமக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி.  இதனால் அவரது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சற்று தர்மசங்கடம் ஏற்பட்டது.

டெல்லியில் நேற்று 71-வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். இந்த விழாவில் பிரேசில் நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா முடிந்ததும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரேசில் அதிபரும் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் பிரதமர் மோடி இந்தியா கேட் வரை நடந்து சென்று அங்கிருந்த பொதுமக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார். பாதுகாப்பு பிரச்சினை பற்றி கருத்தில் கொள்ளாமல் அவர் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடி சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் மோடியை வாழ்த்தி குரல் எழுப்பினர். மேலும் அவரை புகைப்படம் எடுத்தனர். பாதுகாப்பு பிரச்சினையை கருத்தில் கொள்ளாமல் பிரதமர் மோடி மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றதால் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுப் போனது என்று கூட சொல்லலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து