முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதா? மு.க. ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தாக்கல் - தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில் இரண்டு அவதூறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயல்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அடிக்கடி விமர்சிக்கும் ஸ்டாலின்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

அவதூறு வழக்கு

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சார்பில், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் கவுரி அசோகன் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் மு.க.ஸ்டாலினை தண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து