முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

51- வது நினைவு நாள்: அண்ணா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி - ஓ.பி.எஸ். மலர் அஞ்சலி

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

அண்ணாவின் 51- வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அண்ணாவின் 51வது நினைவு நாள் நேற்று தமிழகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டது. ஆங்காங்கே அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது படத்துக்கு மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

பேரறிஞர் அண்ணாவின் 51- வது நினைவு நாளான நேற்று காலை 10.10 மணி அளவில், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில், அ தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும்,  முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக அண்ணா நினைவிடம் மலர்களால் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது. அ தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, எம்.சி.சம்பத், ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், பா.பென்ஜமின், பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.வளர்மதி, எஸ்.கோகுல இந்திரா, பொன்னையன், ஜே.சி.டி. பிரபாகர், முன்னாள் சபாநாயகர் மு.தம்பிதுரை, முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, பெரும்பாக்கம் ராஜசேகர், மனோஜ் பாண்டியன், செம்மலை எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, டி.ஜி. வெங்கடேஷ் பாபு, தி.நகர் பி.சத்யா எம்.எல்.ஏ., விருகை ரவி எம்.எல்.ஏ., ஆர்.எஸ். ராஜேஷ், சிறுணியம் பலராமன், வாலாஜாபாத் கணேசன் மற்றும் மாநில இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கே.குப்பன், கே.பி.கந்தன், முன்னாள் எம்.பி. டாக்டர் ஜெயவர்த்தன், டியூசிஸ் சீனிவாசன், முன்னாள் சுகாதார நிலைக்குழு தலைவர் ஆ. பழனி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் எஸ்.எஸ். கே. கோபால், மாவட்ட பேரவை இணை செயலாளர் பிராட்வே எம்.இஸ்மாயில்கனி, லிபர்டி ராஜூ, சிந்தாதிரிப்பேட்டை பாண்டியன், வட்ட செயலாளர் பி. இளையமாறன், ஏ.ஏ. அர்ஜூனன், இ.எஸ். சதீஷ்பாபு, இளைய கிருஷ்ணன், வழக்கறிஞர் சதாசிவம், சரஸ்வதி ரங்கசாமி, மின்சாரம் சத்திய நாராயணமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

அண்ணாவின் 51- வது ஆண்டு நினைவு நாளான நேற்று புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு, அ.தி.மு.க. சார்பில், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, கழக துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்புச் செயலாளரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஆர்.வைத்திலிங்கம், நாடாளுமன்ற மாநிலங்களவைக் குழு துணைத் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை குழுப் பொருளாளருமான ஏ.கே.செல்வராஜ், மகளிர் அணிச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை குழுக் கொறடாவுமான விஜிலா சத்தியானந்த், நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவர் ப. ரவீந்திரநாத்குமார், எஸ்.முத்துக்கருப்பன், நாடாளுமன்ற மாநிலங்களவை குழுச் செயலாளர் ஏ.விஜயகுமார், அ. முஹம்மத் ஜான், என். சந்திரசேகரன், என்.கோகுலகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து