முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி மரியாதை

திங்கட்கிழமை, 3 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படை கோட்பாடுகளான கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்ற வார்த்தைகளை முன்மொழிந்த அண்ணா உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டு கொலு வீற்றிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அத்தகைய பேரறிஞரின் 51வது நினைவுதினம் நேற்று தமிழகம் முழுவதும்  அனுசரிக்கப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.   இந்நிலையில், மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னணி நிர்வாகிகள் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அ.தி.மு.க. மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு அண்ணாவிற்கு மரியாதை செலுத்தினர். முன்னதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் பேரறிஞர் அண்ணாவிற்கு மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தகக்கது.இதேபோல் மதுரை திருச்சி கோவை போன்ற முக்கிய நகரங்களிலும் அண்ணா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து