முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

புதன்கிழமை, 5 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை தலைமை கழகத்தில் வரும் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட வாரியாக அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

இது குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

அ.தி.மு.க. வளர்ச்சி பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் வருகிற 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலும், மாலை 4.30 மணி் முதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெறும்.

அதன்படி வரும் 10-ம் தேதி திங்கட் கிழமை காலை 10 மணிக்கு கரூர், தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கும், மாலை 4.30 மணியளவில் மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, மதுரை புறநகர் மேற்கு, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

11-ம் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கும் மாலை 4.30 மணியளவில் கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மத்தியம், கடலூர் மேற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெறும். 12-ம் தேதி காலை 10 மணிக்கு தேனி, அரியலூர், தருமபுரி, கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கும், மாலை 4.30 மணியளவில் சேலம் மாநகர், சேலம் புறநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

13-ம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுக்கும், மாலை 4.30 மணியளவில் விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, வடசென்னை வடக்கு(கிழக்கு), வடசென்னை வடக்கு(மேற்கு), வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் தாங்கள் சார்ந்துள்ள மாவட்டத்திற்கான தேதி மற்றும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து