முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருமான வரித்துறை அதிரடி: நடிகர் விஜய் - வீடுகளில் விடிய விடிய ரெய்டு - வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு என தகவல்

வியாழக்கிழமை, 6 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : நடிகர் விஜய் - அவரது மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பிகில் படத்திற்காக நடிகர் விஜய் ரூ.30 கோடி சம்பளம் பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அருகே நடிகர்  விஜய்யின் பனையூர் இல்லத்தில் 18 மணி நேரத்திற்கு மேலாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தி.நகரிலுள்ள கல்பாத்தி அகோரத்தின் அலுவலகத்தில் சோதனையிட்டபோது, பிகில் படத்திற்குச் செலவழித்த கணக்கு விவரங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில், `பிகில்’ படத்திற்காக நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளத்தொகை குறிப்பிடப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், நடிகர் விஜய்யிடம் விளக்கம் பெற வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்ததாகவும், இதற்காகத்தான் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ திரைப்படப் படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் விசாரணை நடத்தியதாகவும் தெரிகிறது. மேலும், நடிகர் விஜய்யை மேல் விசாரணைக்காக சென்னைக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து வர முடிவு செய்திருந்ததாக தெரிகிறது. இதையடுத்து தனது சொந்த ஜாக்குவார் காரில் ஏற முற்பட்ட விஜய்யை தடுத்த வருமானவரித்துறை அதிகாரிகள், தங்களது இன்னோவா காரில் ஏற்றி சென்னை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் சாலிகிராமம் வீட்டிலும் வருமானவரி சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் தொடர்ந்து நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ் சினிமாஸ், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோரது வீடு மற்றும் அலுவலகங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் தொடர் சோதனை நடத்தினர். பிகில் பட வருமான விவகாரத்தில் குளறுபடி நடந்துள்ளதாக கூறி ஏ.ஜி.எஸ். சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடிகர் விஜய்யிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் பணியில் வருமான வரித்துறையினர் தீவிரம் காட்டினர். சென்னை அடுத்த பனையூரில் உள்ள வீட்டில் 6 வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்தினர். பிகில் திரைப்படத்தில் நடித்ததற்கு ரூ.30 கோடி சம்பளம் பெற்றது குறித்து விசாரணை நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

சென்னை மற்றும் மதுரையில் கடந்த 2 நாளாக நடந்த சோதனை பற்றி வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாட்டில் 38 இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைனான்சியர் அன்புசெழியன், நடிகர் விஜய், அவரது நண்பன் சரவணன் ஆகியோர் வீட்டில் சோதனை நடந்ததை வருமான வரித்துறை உறுதி செய்துள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து